யாழ்ற்ரன் கல்லூரி மாணவன் செந்தில்நாதன் கஜரூபன் (தரம் 8) அவர்கள் இயற்றிய கவிதைகளின் தொகுப்பு நூல் வெளியீடு
யாழ்ற்ரன் கல்லூரி மாணவன் செந்தில்நாதன் கஜரூபன் என்ற மாணவனால் இயற்றப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா 10-09-2015 அன்று கல்லூரி முத்தமிழ் மன்றத்தினரால் நடாத்தப்பட்டது. அன்றைய தினம் முற்பகல் 9 மணிக்கு கல்லூரி அதிபர் வே.முருகமூர்த்தி அவர்களின் தலைமையில் விழா ஆரம்பமாகியது.
பிரதம விருந்தினராக வடமாகாணக் கல்வி அமைச்சின் முன்னாள் பிரதிச்செயலாளர் திரு. ப. விக்னேஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். பல அறிஞர்களின் வாழ்த்துரைகளுடன், பண்டிதர் மு. சு. வேலாயுதபிள்ளை அவர்களினால் நூல் வெளியீடு செய்து வைக்கப்பட்டது. முதற்பிரதியை காரை அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவர் சிவா. T. மகேசன் அவர்கள் பெற்று கௌரவித்தார். கல்லூரி வரலாற்றில் மாணவர்களின் ஆக்கம் வெளியிடப்பட்டது இதுவே முதற் தடவை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.