சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் கண்டெடுத்து உரியவரிடம் ஒப்படைப்பு.

DSC06055சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் கண்டெடுத்து உரியவரிடம் ஒப்படைப்பு. ஆட்டோ சாரதி மு.நடராசாவின் முன்மாதிரிக்கு பலரும் பாராட்டு.

காரைநகரில் கடந்தவாரம் ஆட்டோவில் கண்டெடுத்த சுமார் 15 இலட்சத்துக்கும் மேற்பட்ட பெறுமதியான நகைகளை கண்டெடுத்து உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காரைநகர் வலந்தலையில் ஆட்டோ ஓடும் காரைநகர் மொந்திபுலத்தைச் சேர்ந்த மு.நடராசாவே இவ்வாறு பெருமனதுடன் இவ் நகைப்பொதியை உரியவரிடம் ஒப்படைத்துள்ளார்.

ஆட்டோவில் பயணம் செய்த பயணி ஒருவரால் தவறவிட்ட நகைப்பொதியை கண்டெடுத்த இவர் நகைப்பொதியின் உடைமையாளரான திக்கரை காரைநகரைச் சேர்ந்த நபரிடம் ஒப்படைத்துள்ளார். இவரின் முன்மாதிரியான செயலை காரைநகர் மக்கள் பாராட்டியுள்ளனர்.

2 comments

    • Rajan on February 17, 2013 at 5:38 am

    He is Great guy.

    • AVR on February 8, 2013 at 9:48 pm

    He is Great !. No words can describe his honesty. You must feel it.

Comments have been disabled.