கண்ணீர் அஞ்சலி, மெய்யப்பா பத்தர் சிவசுப்பிரமணியம், திருமதி.பாக்கியலட்சுமி சிவசுப்பிரமணியம் (பாரத் ஸ்ரூடியோ, கன்னாதிட்டி, யாழ்ப்பாணம்)

                                  கண்ணீர் அஞ்சலி

Sympathy_Candle

 மெய்யப்பா பத்தர் சிவசுப்பிரமணியம்,  திருமதி.பாக்கியலட்சுமி                              சிவசுப்பிரமணியம்

               (பாரத் ஸ்ரூடியோ, கன்னாதிட்டி, யாழ்ப்பாணம்)

எமது மன்ற நிகழ்வுகளை குறிப்பாக காரை வசந்தம் கலைவிழாவினை ஆண்டுதோறும் இலவசமாக நிழற்படம் எடுத்து உதவிவருபவரும் பிரபல புகைப்படக்கலைஞருமான பாரத் ஸ்ரூடியோ திரு.சி.சோமாஸ்கந்தன் அவர்களின் அன்புப் பெற்றோர்களான அமரர். மெய்யப்பா பத்தர் சிவசுப்பிரமணியம் மற்றும் அமரர்.திருமதி.பாக்கியலட்சுமி சிவசுப்பிரமணியம் ஆகியோர் சிவபதமடைந்த செய்தி அறிந்து கனடா-காரை கலாச்சார மன்றம் அதிர்ச்சியும் ஆழ்ந்த துயரம் அடைந்துள்ளது. 

அன்னார்களின் மறைவினால் தாங்கொணாத் துயருற்றிருக்கும் அன்னாரின் பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் உற்றார் உறவினர் அனைவருக்கும் எமது மன்றம் ஆழ்ந்த அனுதாபத்தினையும் ஆறுதலையும் தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

கனடா-காரை கலாச்சார மன்றம்