கனடா காரை கலாசார மன்றம் 2014ம் ஆண்டு முதல் தைப்பொங்கல் திருநாளினை பொங்கல் பொங்கி வழிபாட்டுடன் கொண்டாடி வருகின்றது.
இவ்வருடமும் 04.01.2015 புதன்கிழமை கனடாவில் பொங்கல் தினத்தன்று ஆதி சிவன் ஆலயத்தில் பொங்கல் பொங்கி வழிபாட்டுடன் சிறப்பாக நடைபெற்றது. இப்பொங்கல் விழாவில் கனடா காரை கலாசார மன்றத்தின் தமிழ், சமய வகுப்புகளில் கலந்து கொள்ளும் சிறார்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
கடந்த வருடம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழ், சமய, யோகா, பிரென்ஞ் வகுப்புக்கள் செவ்வாய், புதன் கிழமைகளில் நடைபெற்று வருகின்றது குறிப்பிடத்தக்கது. நத்தார் விடுமுறையை தொடர்ந்து மீண்டும் யனவரி 21 தமிழ். சமய வகுப்புக்கள் ஆரம்பமாகவுள்ளது.
புதிதாக இணைந்து கொள்ள விரும்புபவர்கள் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.