திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை அவர்களின் மறைவிற்கு கனடா-காரை கலாசார மன்றம் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தி.

திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை அவர்களின் மறைவிற்கு

கனடா-காரை கலாசார மன்றம் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தி.

கனடா-காரை கலாசார மன்றத்தின் பணிகளில் மிகுந்த அக்கறையுடன் ஈடுபட்டு வந்தது மட்டுமல்லாது அச்சங்கத்தில் நிர்வாக சபை உறுப்பினராகவும், திட்டமிடல் போசகர் சபை உறுப்பினராகவும், கணக்காய்வாளராகவும் பொறுப்பு மிக்க பதவிகளை வகித்து மன்றத்தின் வளர்ச்சியை முன்னெடுத்து வந்த திரு.முருகேசம்பிள்னை வேலாயுதபிள்ளை அவர்களின் மறைவுச் செய்தி கனடா-காரை கலாசார மன்றத்தினை கலங்கவைத்துள்ளது.

திரு.வேலாயுதபிள்ளை அவர்கள் தமது அனுபவங்களையும் அறிவையும் பகிர்ந்துகொண்டு எமது சங்கத்தின் நேரிய செயற்பாட்டிற்கு வழிகோலியவர். சங்கத்தின் எத்தகைய நிகழ்வானாலும் அவையனைத்திலும் தவறாது கலந்துகொண்டு தமது ஊர் அபிமானத்தை வெளிப்படுத்தி வந்தவர். கடந்த பல ஆண்டுகளாக மன்றத்தின் ஒன்றுகூடல் நிகழ்விற்கு பழம்சோற்றுத் தண்ணீர் தயாரித்து வந்து பரிமாறி வந்தமையையும் அதனை பலரும் விரும்பி பருகி வந்ததையும் சிறப்பாக குறிப்பிடலாம். அனைருடனும் மலர்ந்த முகத்துடன் அன்பாகப் பழகி நட்பு கொண்டாடி மகிழ்வதில் இவருக்கு இருந்து வந்த ஆர்வம் பாராட்டப்படக்கூடிதாகும். மன்றத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளிற்கு ஆலோசகைள் பெறுவதற்கு இவரை அணுகி வந்தமை இவரது சிறந்த ஆளுமைக்கு சான்று பகர்வதாகவுள்ளது. திரு.வேலாயுதபிள்ளை அவர்கள் மன்றத்திற்கு வழங்கிய அர்ப்பணிப்பு மிக்க பெரும் சேவையை கருத்திற்கொண்ட மன்ற நிர்வாகம் அதன் வருடாந்த கலை விழாவிற்கு பிரதம விருந்தினராக அழைத்து பெருமைப்படுத்தியதை இத்தருணத்தில் நினைவுகூரலாம்.

திரு.வேலாயுதபிள்ளை அவர்களது மறைவினால் துயரக்கடலில் மூழ்கித் தவிக்கும் அன்னாரது குடும்பத்திற்கு கனடா-காரை கலாசார மன்றம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றது.

கனடா-காரை கலாசார மன்றம்