காரை கிட்ஸ் பார்க் பாலர் பாடசாலை தனது 13வது ஆண்டில் புதுப் பொழிவுடன் புதிய இடத்தில் 06.01.2022 வியாழக்கிழமை ஆரம்பமாகியது.

 

காரை கிட்ஸ் பார்க் பாலர் பாடசாலை தனது 13வது ஆண்டில்

புதுப் பொழிவுடன் புதிய இடத்தில் 06.01.2022 வியாழக்கிழமை

ஆரம்பமாகியது.

கலைமாடக்கோன் சண்முகம் சிவஞானம் அவர்களின் பேருதவியுடன் காரை கிட்ஸ் பார்க் பாலர் பாடசாலை தனது 13வது ஆண்டில் புதுப் பொழிவுடன் புதிய இடத்தில் 06.01.2022 வியாழக்கிழமை ஆரம்பமாகியது.

காரை கிட்ஸ் பார்க் பாலர் பாடசாலையின் தலைவர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளளை தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலைமாடக்கோன் சண்முகம் சிவஞானம் தம்பதியினர் முதன்மை விருந்தினர்களாகக் கலந்து கொண்டு பாடசாலையினை ஆரம்பித்து வைத்தனர்.

இந்த நிகழ்வில் தீவக வலய முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர், காரைநகர் பிரதேச முன்பள்ளி ஒருங்கிணைப்பாளர், மற்றும் பெற்றோர்கள் ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

2009ம் ஆண்டு காரைநகரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பாலர் பாடசாலையானது பல்வேறு இடங்களில் இயங்கி வந்ததுடன் தற்போது புது வீதிச் சந்திக்கருகாமையில் உள்ள மாணவர் நூலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள கட்டடத்தில் சண்முகம் சிவஞானம் அவர்களின் பேருதவியுடன் இப் பாலர் பாடசாலை மீள ஆரம்பமாகி உள்ளது.

 

படங்களை பார்வையிட கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

https://photos.app.goo.gl/pt27kHE2RA7WTKWb7