Category: கிட்ஸ் பார்க் பாலர் பாடசாலை

காரைநகர் கிட்ஸ் பார்க் பாலர் பாடசாலை வருடாந்த விளையாட்டு விழா பாலர் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் ஓய்வு நிலை அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை தலைமையில் 02.07.2022 சனிக்கிழமை நடைபெற்றது!

 

படங்களை பார்வையிட கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

https://photos.app.goo.gl/u8wvcvn3kivyX3eaA

காரை கிட்ஸ் பார்க் பாலர் பாடசாலை தனது 13வது ஆண்டில் புதுப் பொழிவுடன் புதிய இடத்தில் 06.01.2022 வியாழக்கிழமை ஆரம்பமாகியது.

 

காரை கிட்ஸ் பார்க் பாலர் பாடசாலை தனது 13வது ஆண்டில்

புதுப் பொழிவுடன் புதிய இடத்தில் 06.01.2022 வியாழக்கிழமை

ஆரம்பமாகியது.

கலைமாடக்கோன் சண்முகம் சிவஞானம் அவர்களின் பேருதவியுடன் காரை கிட்ஸ் பார்க் பாலர் பாடசாலை தனது 13வது ஆண்டில் புதுப் பொழிவுடன் புதிய இடத்தில் 06.01.2022 வியாழக்கிழமை ஆரம்பமாகியது.

காரை கிட்ஸ் பார்க் பாலர் பாடசாலையின் தலைவர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளளை தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலைமாடக்கோன் சண்முகம் சிவஞானம் தம்பதியினர் முதன்மை விருந்தினர்களாகக் கலந்து கொண்டு பாடசாலையினை ஆரம்பித்து வைத்தனர்.

இந்த நிகழ்வில் தீவக வலய முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர், காரைநகர் பிரதேச முன்பள்ளி ஒருங்கிணைப்பாளர், மற்றும் பெற்றோர்கள் ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

2009ம் ஆண்டு காரைநகரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பாலர் பாடசாலையானது பல்வேறு இடங்களில் இயங்கி வந்ததுடன் தற்போது புது வீதிச் சந்திக்கருகாமையில் உள்ள மாணவர் நூலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள கட்டடத்தில் சண்முகம் சிவஞானம் அவர்களின் பேருதவியுடன் இப் பாலர் பாடசாலை மீள ஆரம்பமாகி உள்ளது.

 

படங்களை பார்வையிட கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

https://photos.app.goo.gl/pt27kHE2RA7WTKWb7

 

 

 

 

காரைநகர் கிட்ஸ் பார்க் பாலர் பாடசாலையில் 06.10.2019 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாணி விழாவும் ஆசிரியர் தின விழாவும்!

IDS PARK

காரைநகர் கிட்ஸ் பார்க் பாலர் பாடசாலை வருடாந்த விளையாட்டு விழா அண்மையில் பாலர் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் ஓய்வு நிலை அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை தலைமையில் நடைபெற்றது.

காரைநகர் கிட்ஸ் பார்க் பாலர் பாடசாலை வருடாந்த விளையாட்டு விழா அண்மையில் பாலர் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் ஓய்வு நிலை அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை தலைமையில்;; நடைபெற்றது.
நிகழ்விற்குப் பிரதம விருந்தினராக காரைநகர் பிரதேச வைத்தியசாலை வைத்திய அதிகாரி மருத்துவர் கே.இந்திரமோகனும் சிறப்பு விருந்தினராக ஓய்வுநிலை வடமாகாணக் கல்வி அமைச்சின் செயலாளரும் காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவருமான ப.விக்னேஸ்வரனும் கௌரவ விருந்தினராக ஓய்வுநிலை தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் வீ.இராதாகிருஸ்ணனும் கலந்துகொண்டனர்

கிட்ஸ் பார்க் பாலர் பாடசாலையின் ஆண்டு விழாவும் கலை விழாவும் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற உள்ளது.

காரைநகர் கிட்ஸ் பார்க் பாலர் பாடசாலையின் ஆண்டு விழாவும் கலை விழாவும் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை  3.00 மணிக்கு காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியில் ஓய்வுநிலை அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை தலைமையில் நடைபெற உள்ளது.

இவ் விழாவில் பிரதம விருந்தினராக ஓய்வுநிலை மாகாணக் கல்விப்பணிப்பாளர் ப. விக்னேஸ்வரனும் சிறப்பு விருந்தினராக யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் வே.முருகமூர்த்தியும் கௌரவ விருந்தினராக ஓய்வு பெற்ற வங்கி உத்தியோகத்தர் இ.சிவசுப்பிரமணியமும் கலந்துகொள்ள உள்ளனர்