Category: திருவிழாப் படங்கள்
காரைநகா் மணற்காடு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய மஹா கும்பாபிஷேகம்
காரைநகா் மணற்காடு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 02.02.2015 திங்கட்கிழமை காலை 9.10 மணிமுதல் 10.10 மணிவரை உள்ள சுபவேளையில் நடைபெறும் என திருப்பணிச்சபையினா் உத்தியோக பூா்வமாக அறியத்தருகின்றார்கள்.
கும்பாபிஷேகத்தினைத் தொடா்ந்து 2015ஆம் ஆண்டின் அம்பாளின் வருடாந்த மஹோற்சவமும் நடைபெறும் என திருப்பணிச்சபையினா் மகிழ்வுடன் அறியத்தருகின்றனா்.
கடந்த 10.02.2014 அன்று அம்பாளின் பாலஸ்தாபனம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அம்பாளின் திருப்பணி வேலைகள் கும்பாபிஷேகத்திற்கு முன்னா் நிறைவுபெற அம்பிகையின் அடியவா்கள் தாராள மனதுடன் நிதியை வாரிவழங்குமாறு வேண்டிநிற்கின்றனா்.
தற்போது ஆலயத்தின் உட்பிரகாரக் கொட்டகை வேலைகள் துரிதமாக நடைபெறுவதையும் தற்போதுள்ள திருப்பணி வேலைகளின் முன்னேற்றத்தையும் படங்களில் காணலாம்.
காரைநகா் மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய திருப்பணிச்சபையின் மாதாந்தக் கூட்டம் 27.07.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.
காரைநகா் மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய திருப்பணிச்சபையின் மாதாந்தக் கூட்டம் 27.07.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.
இதன்போது திருப்பணிச் சபையினரால் அமைக்கப்பட்ட கும்பாபிஷேகக் குழுவினரும் கலந்து கொண்டனா். கும்பாபிஷேகக் குழு சார்பில் திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன், திரு.ப.ஐங்கரன், திரு.ந.கணேசமுா்த்தி, திரு.கே.ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோர் கலந்து கொண்டனா்.
இதன்போது ஆலயத்தின் தெற்கு வாசலில் மூன்று தளங்களைக் கொண்ட கோபுரம் ஒன்றை அமைப்பதற்கான அனுசரணையை வழங்குமாறு திரு.கதிர்காமநாதன் அவா்களிடம் கேட்கப்பட்டது. இதற்கான நிதி ரூபா 2500000.00 (இருபத்தைந்து இலட்சம்) ரூபாவை தானே வழங்குவதாக உறுதியளித்தார். திருப்பணிச்சபையினா் இதனை நன்றியறிதலுடன் ஏற்றுக்கொண்டனா்.
மஹா கும்பாபிஷேகத்தை விரைவில் நடாத்துவதற்கான ஒழுங்குகள் சம்மந்தமாகவும் சபையில் ஆராயப்பட்டுள்ளது. இதன்போது கும்பாபிஷேகப் பெருவிழாவிற்கான சிறு குழுக்களும் அமைக்கப்பட்டது. இம்மாதத்திற்குள் கும்பாபிஷேகத்திற்கான திகதி, குருக்கள்மார் போன்ற விபரங்கள் திருப்பணிச்சபையினரால் வெளியிடப்படும். 27.07.2014 அன்று நடைபெற்ற திருப்பணிச்சபைக் கூட்டத்தின் காட்சிகளையும் திருப்பணிச்சபையின் செயலாளா் திருப்பணிச்சபையினருக்கும் கும்பாபிஷேகக் குழுவினருக்கும் ஆலயத்திருப்பணி வேலைகளின் முன்னேற்றத்தை காண்பிப்பதையும் படங்களில் காணலாம்.
அம்பாளின் கும்பாபிஷேகம் இனிதே நிறைவு பெறவும் திருப்பணி வேலைகளை முடிவுறுத்தவும் தாராளமாக உதவுமாறு வேண்டி நிற்கின்றனா் திருப்பணிச்சபையினா்
காரைநகர் வியாவில் ஜயனார் ஆலய வருடாந்த பெருந்திருவிழாவின் மூன்றாம் நாள் திருவிழாவான 19/07/2014 சனிக்கிழமை இரவுத் திருவிழாக் காட்சிகள்.
காரைநகர் வியாவில் ஜயனார் ஆலய வருடாந்த பெருந்திருவிழாவின் மூன்றாம் நாள் திருவிழாவான 19/07/2014 சனிக்கிழமை இரவுத் திருவிழாக் காட்சிகள். நிகழ்வில் விசேட மேளக்கச்சேரி மற்றும் கருவி மாற்றாற்றலுடையோர் சமூக அபிவிருத்தி நிறுவன அங்கத்தவர்களின் பட்டிமன்றம் என்பன இடம்பெற்றது.
ஆலய வருடாந்த பெருந்திருவிழா கடந்த வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித் தொடர்ந்து பத்துத் தினங்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
இந்தப் பெருந்திருவிழாவில் தேர்த் திருவிழா 25ந் திகதி வெள்ளிக்கிழமையும் தீர்த்தத் திருவிழா மறுநாள் சனிக்கிழமையும் நடைபெற உள்ளது.
வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள தேர்த்திருவிழா அன்றைய தினம் காலை 8.30 மணி தொடக்கம் சிவன் ரி.வியில் நேரடி ஒளிபரப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆலய அறங்காவலர் மகாராணி க.சோமசேகரம் தெரிவித்துள்ளார்.