காரைநகர் வியாவில் ஜயனார் ஆலய வருடாந்த பெருந்திருவிழாவின் மூன்றாம் நாள் திருவிழாவான 19/07/2014 சனிக்கிழமை இரவுத் திருவிழாக் காட்சிகள். நிகழ்வில் விசேட மேளக்கச்சேரி மற்றும் கருவி மாற்றாற்றலுடையோர் சமூக அபிவிருத்தி நிறுவன அங்கத்தவர்களின் பட்டிமன்றம் என்பன இடம்பெற்றது.
ஆலய வருடாந்த பெருந்திருவிழா கடந்த வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித் தொடர்ந்து பத்துத் தினங்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
இந்தப் பெருந்திருவிழாவில் தேர்த் திருவிழா 25ந் திகதி வெள்ளிக்கிழமையும் தீர்த்தத் திருவிழா மறுநாள் சனிக்கிழமையும் நடைபெற உள்ளது.
வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள தேர்த்திருவிழா அன்றைய தினம் காலை 8.30 மணி தொடக்கம் சிவன் ரி.வியில் நேரடி ஒளிபரப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆலய அறங்காவலர் மகாராணி க.சோமசேகரம் தெரிவித்துள்ளார்.