காரைநகா் மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய திருப்பணிச்சபையின் மாதாந்தக் கூட்டம் 27.07.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.

காரைநகா் மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய திருப்பணிச்சபையின் மாதாந்தக் கூட்டம் 27.07.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.

இதன்போது திருப்பணிச் சபையினரால்  அமைக்கப்பட்ட கும்பாபிஷேகக் குழுவினரும் கலந்து கொண்டனா். கும்பாபிஷேகக் குழு சார்பில் திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன், திரு.ப.ஐங்கரன், திரு.ந.கணேசமுா்த்தி, திரு.கே.ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோர் கலந்து கொண்டனா்.

இதன்போது ஆலயத்தின் தெற்கு வாசலில் மூன்று தளங்களைக் கொண்ட கோபுரம் ஒன்றை அமைப்பதற்கான அனுசரணையை வழங்குமாறு திரு.கதிர்காமநாதன் அவா்களிடம் கேட்கப்பட்டது. இதற்கான நிதி ரூபா 2500000.00 (இருபத்தைந்து இலட்சம்) ரூபாவை தானே வழங்குவதாக உறுதியளித்தார். திருப்பணிச்சபையினா் இதனை நன்றியறிதலுடன் ஏற்றுக்கொண்டனா்.

மஹா கும்பாபிஷேகத்தை விரைவில் நடாத்துவதற்கான ஒழுங்குகள் சம்மந்தமாகவும் சபையில் ஆராயப்பட்டுள்ளது. இதன்போது கும்பாபிஷேகப் பெருவிழாவிற்கான சிறு குழுக்களும் அமைக்கப்பட்டது. இம்மாதத்திற்குள் கும்பாபிஷேகத்திற்கான திகதி, குருக்கள்மார் போன்ற விபரங்கள் திருப்பணிச்சபையினரால் வெளியிடப்படும். 27.07.2014 அன்று நடைபெற்ற திருப்பணிச்சபைக் கூட்டத்தின் காட்சிகளையும் திருப்பணிச்சபையின் செயலாளா் திருப்பணிச்சபையினருக்கும் கும்பாபிஷேகக் குழுவினருக்கும் ஆலயத்திருப்பணி வேலைகளின் முன்னேற்றத்தை காண்பிப்பதையும் படங்களில் காணலாம்.

அம்பாளின் கும்பாபிஷேகம் இனிதே நிறைவு பெறவும் திருப்பணி வேலைகளை முடிவுறுத்தவும் தாராளமாக உதவுமாறு வேண்டி நிற்கின்றனா் திருப்பணிச்சபையினா்