கிட்ஸ் பார்க் பாலர் பாடசாலையின் ஆண்டு விழாவும் கலை விழாவும் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற உள்ளது.

காரைநகர் கிட்ஸ் பார்க் பாலர் பாடசாலையின் ஆண்டு விழாவும் கலை விழாவும் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை  3.00 மணிக்கு காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியில் ஓய்வுநிலை அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை தலைமையில் நடைபெற உள்ளது.

இவ் விழாவில் பிரதம விருந்தினராக ஓய்வுநிலை மாகாணக் கல்விப்பணிப்பாளர் ப. விக்னேஸ்வரனும் சிறப்பு விருந்தினராக யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் வே.முருகமூர்த்தியும் கௌரவ விருந்தினராக ஓய்வு பெற்ற வங்கி உத்தியோகத்தர் இ.சிவசுப்பிரமணியமும் கலந்துகொள்ள உள்ளனர்