Tag: வியாவில்
வியாவில் ஐயனார் ஆலயத்தில் சைவக்களஞ்சியம் நூல் வெளியீடு!
![](https://i0.wp.com/karainagar.com/pages/wp-content/uploads/2013/04/DSC_1032-e1366482210920.jpg?fit=645%2C329&ssl=1)
வியாவில் ஐயனார் ஆலயத்தில் சைவக்களஞ்சியம் நூல் வெளியீடு!
வியாவில் ஐயனார் ஆலயத்தில் சைவக்களஞ்சிளம் எனும் நூல் வெளியீடடு விழா சிறப்பாக இன்று நடைபெற்றது. மாகாணக்கல்வி அமைச்சின் பிரதிச்செயளாளர் ப.விக்கினேஸ்வரன் தலமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் அறங்காவலர் சோமசேகரம் வரவேற்புரை நிகழ்த்த மூதறிஞர் கலாநிதி வைத்தீஸ்வரக்குருக்கள் வெளியீட்டுவைக்க கல்விக் காருண்யன் தொழிலதிபர் பே.நாகரட்னம் சிறப்புப்பிரதியை பெற்றார். வெளியீட்டுரையை யாழ் பல்கலைக்கழக தமிழ்துறைப் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராசா நிகழ்த்த வாழ்த்துரையை யாழ் பல்கலைக்கழக இந்துநாகரீகத்துறைத்தலைவர் ந.வேதநாதன், கலாநிதி ஆறுதிருமுருகன் ஆகியோர் நிகழ்தினர். இவ் நூலை செவ்வையிட்டு அச்சிட்ட அச்சக உரிமையாளர் ஆசிரியர் ந.கணேசமூர்த்தி நூலாசிரியர் மூதறிஞர் கலாநிதி வைத்தீஸ்வரக்குருக்கள் அவர்களாள் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார். இந் நிகழ்வுப்படங்களை இங்கே காணலாம்.
வியாவில் ஐயனார் ஆலயத்தில் இளைஞர்களின் ஏற்பாட்டில் உறியடி உற்சவம்
வியாவில் ஐயனார் ஆலயத்தில் இளைஞர்களின் ஏற்பாட்டில் உறியடி உற்சவம் புத்தாண்டு தினமாகிய நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வுகளை படங்களில் காணலாம்.
காரைநகர் பிரதேச புற்றுநோயாளர்களுக்கு வியாவில் ஐயனார் தேவஸ்தானம் சத்துணவுப் பொதிகளை வழங்கியது
![](https://i0.wp.com/karainagar.com/pages/wp-content/uploads/2013/02/DSC06477.jpg?fit=645%2C484&ssl=1)
காரைநகர் பிரதேச புற்றுநோயாளர்களுக்கு வியாவில் ஐயனார் தேவஸ்தானம் சத்துணவுப் பொதிகளை வழங்கியது.
காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் புற்று நோயாளர்களுக்கு சத்துணவுப் பொதிகளை வியாவில் ஐயனார் ஆலயத்தினூடாக லண்டனைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும் சமூக சேவையாளருமான நட்டு நட்டுவாணி அவர்களின் நிதியுதவியுடன் வழங்கப்பட்டது. இந்நிகழ்வினை படங்களில் காணலாம்.
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரால் வியாவில் ஐயனார் ஆலயத்தினூடாக வாழ்வாதார உதவிகள்
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரால் வியாவில் ஐயனார் ஆலயத்தினூடாக வாழ்வாதார உதவிகள்