காரை வசந்தம் தொடர்பான அறிவித்தல்!

காரை வசந்தம் தொடர்பான அறிவித்தல்

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் இவ்வாண்டிற்கான காரை வசந்தம் நிகழ்ச்சி ஐப்பசி மாதம் 11ம் திகதிநடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கிசைவாக தமிழ் இசை கலாமன்ற மண்டபம் பதிவு செய்யப்பட்டு முற்பணமும் செலுத்தப்பட்டிருந்தது.

உலகளாவில் கொரோனா தொற்று 2ம் முறையாகவும் பரவி வருவதனால் காரை வசந்தம் நடத்தமுடியாத சூழல் உருவாகியுள்ளது. ஒன்ராரியோ அரசின் விதிமுறைகளிற்கமைய இவ்வருட நிகழ்ச்சிகளை இரத்துச்செய்வதென கனடா காரை கலாச்சார மன்ற நிர்வாக சபையால் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இம்முடிவை மனவருத்தத்துடன்அறியத்தருகிறோம்.

        நிர்வாகசபை
கனடா காரை கலாச்சார மன்றம்