மரண அறிவித்தல்
அன்னபூரணம் சிவகுருநாதன்
(அளவெட்டி) (சுப்பிரமணியம் வீதி,காரைநகர்)
அளவெட்டி கேணிக்கரை – அலுக்கையைப் பிறப்பிடமாகவும் காரைநகர் சுப்பிரமணியம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னபூரணம் சிவகுருநாதன் அவர்கள் 27-07-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லையா-மனோன்மனி தம்பதிகளின் ஏக புத்திரியும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி-மீனாட்சிப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவகுருநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
பிரபாகரன் (ஆசிரியர் -யாழ்ற்றன் கல்லூரி, காரைநகர்), கிருபாகரன் (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இராமச்சந்திரன், சச்சிதானந்தம் (முன்னாள் கிராமசேவையாளர் – மல்லாகம் வடக்கு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நடராசா சிவபாக்கியம், நடராசா தனபாக்கியம், சச்சிதானந்தம் தோத்திரமலர் (இலண்டன்) ஆகியோரின் மைத்துனியும்,
ரிஷசாந்தியின் (இலண்டன்) பாசமிகு மாமியாரும்,
உமாஷங்கரி, சிவதேவ் ஆகியோரின் செல்லப் பேர்த்தியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 1.00 மணியளவில் காரைநகர் சுப்பிரமணியம் வீதியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரியைக்காக காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
சி. பிரபாகரன் (+94 776000752)
சி. கிருபாகரன் (+44 7957763975)