வாரிவளவு நல்லியக்கச் சபை பொன் விழா

வாரிவளவு நல்லியக்கச் சபை

பொன் விழா

எஸ்.கே.சதாசிவம்.

1970ம் ஆண்டு சித்திரை மாதம் 11ம் திகதி வாரிவளவு நல்லியக்கச்சபை உதயமாகியது.1990 வரை சித்திரை வருடப்பிறப்பு காலங்களில் வாரிவளவு நல்லியக்கச்சபை நிகழ்வுகள் கொடிகட்டி பறந்த காலம்.வலந்தலை துறைமுகம் பகுதியில் இருந்து மக்கள் பேரூந்துக்களில் வாரிவளவுக்கு வந்து சேர்வர்.களபுமி மக்கள் கேசடை வயல் வழி பாதை வழி வாரிவளவுக்கு வந்து சேர்வர்.இக் கால பகுதியை மக்கள் வாரிவளவு கொண்டாட்டத்திற்காக ஒதுக்கிக் கொள்வர்.முழுக் கிராமமும் வாரிவளவில் சங்கமிக்கும்.

மாதம் தோறும் பண்ணிசை போட்டிகள்,திருக்குறட்போட்டிகள், ஆத்திசுடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, போன்ற நீதி நுற் பாடற் போட்டிகள் நடைபெறும்.5ம் ஆண்டு புலமைப்பரிசில் முன்னோடி பரீட்சைகள், க.பொ.த.சாதாரண தர கணித / விஞ்ஞான முன்னோடி பரீட்சைகள் என்பன நடைபெறும்.

சித்திரை வருடப்பிறப்பு சிறப்பு நிகழ்வாக உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம்,துடுப்பாட்டம், மரதன் ஓட்டம், சைக்கிள் ஓட்டம், நீச்சல் போட்டி என்பன நடைபெறும்.வாரிவளவு பிள்ளையார் கோவில் தெற்கு வீதியில் பாலர் பாடசாலை மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறும்.வாரிவளவு பிள்ளையார் கோவில் வீதியில் தென் கிழக்கில் அமைந்துள்ள ஆலமரத்தின் கீழ் உள்ள அரங்கில் பேச்சு, பாட்டு, கலைநிகழ்வுகள் நடைபெறும்.போட்டிகள் யாவும் விறுவிறுப்பும் கலகலப்பும் நிறைந்தவை.

வருடம் முழுவதும் நடைபெற்ற போட்டிகளுக்கான பரிசளிப்பும் பாராட்டும் கலை நிகழ்வுகளுடன் புதுவருடத்திற்கு அண்மிய தினங்களில் நடைபெறும். விளையாட்டு போட்டிநிகழ்வுகளில் வெற்றி பெற்றவர்கள், பரீடசைகளில் வெற்றி பெற்றவர்கள், க.பொ.த சாதாரண தரத்தில் சிறப்பு பேறு பெற்றவர்கள், பல்கலைக்கழக அனுமதி பெற்றவர்கள், பல்கலைக்கழக பரீட்சையில் சித்தி பெற்றவர்கள் ஆகியோருக்கு பரிசில்கள் வழங்கப்படும்.சமூகத்திற்கு தொண்டாற்றிய கல்விமான்கள், பெரியோர்கள் கௌரவிக்கப்படுவார்கள்.

வாரிவளவு நல்லியக்கச்சபை தன் பணிக்காலத்தில் காரைநகரில் பல்துறைசார் வல்லுனர்கள் உருவாக களம் அமைத்துக் கொடுத்தது.

பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை அனைவரையும் வருடம் முழுவதும் ஏதோ ஒரு நிகழ்வில் ஈடுபடுத்தி அனைவரும் சுறுசுறுப்புடன் இயங்க சுறுசுறுப்பாக இயங்கியவர் பட்டுமாமா.காரைநகரின் பொதுவாழ்வில் தனிமனித சாதனையாளர்கள் பலர் உள்ளனர்.இந்த தனிமனித சாதனையாளர்களுக்கு அமைதியான மக்கள் ஆதரவு இருந்தமையால் அவர்கள் சமூகத்தை முன்னோக்கி நகர்த்துவதில் காத்திரமான பங்களிப்பு வழங்கினர்.ஒரு குறிப்பிட்ட கால பகுதியில் மாணவர் சமூகத்தை, இளைஞர் சமூகத்தை உருவாக்குவதில் பட்டுமாமா சத்தம் இன்றி செயல்பட்டிருக்கின்றார்.

முகநுலில் பிரபல்யமான கேரளத்தின் பிரபல பாடகர் ரேஸ்மி சதீஸ் அவர்களின் மலையாள பாடல் தமிழில்

அன்றங்கே ஒருநாடுருந்ததே
அந் நாட்டில் ஆறுருந்ததே

என்ற பாடல் வரிகள் எமக்கு ஏற்புடையதாகும் வரை காத்திருத்தல் நன்றன்று.

 

varivalavu Pattu

 

 

 

1 comments

    • Sivamani on May 24, 2020 at 3:39 pm

    Thanks to mr sathasivam for the article about varivalavu welfare society and paddu mama. Before celebrating the golden jubilee I wish the building of the society will be released from ………….. and put to good use. I and my family were the founder members of the society

Comments have been disabled.