மரண அறிவித்தல், திருமதி ஜெகதாம்பிகை வாமதேவன் (தம்பிலுவில், மட்டக்களப்பு) (ரொறன்ரோ, கனடா)

 

 

மரண அறிவித்தல்

திருமதி ஜெகதாம்பிகை வாமதேவன்

(தம்பிலுவில், மட்டக்களப்பு – ரொறன்ரோ, கனடா)

தம்பிலுவில், மட்டக்களப்பை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்து தற்போது ரொறன்ரோ, கனடாவில் வசித்து வந்தவரான ஜெகதாம்பிகை 17-04-2020 வெள்ளிக்கிழமை சிவபதம் அடைந்தார்.

அன்னார் சிவன்கோயிலடி, காரைநகரைச் சேர்ந்த காலஞ்சென்ற பேரம்பலம் மற்றும் மங்கையற்கரசி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், திருமகள் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

வாமதேவனின் ஆருயிர் மனைவியும்,

குகப்பிரியனின் பாசமிகு தாயாரும்,

இராஜாம்பிகை(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற இராஜேஸ்வரன், காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன், மற்றும் அமிர்தாம்பிகை(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சிவபாதசிங்கம், மற்றும் ஜெயந்தி, மஞ்சுளா, ஜெயக்குமார்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 21-04-2020 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.00மணி முதல் பிற்பகல் 4.00மணி வரை 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada என்ற முகவரியில் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home & Cremation Centre இல் பார்வைக்கு வைக்கப்பட்டு ஈமைக் கிரியைகள் நடைபெற்ற பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளிற்கு:
வாமதேவன்(கணவன்) – 437 998 9078
அமிர்தாம்பிகை(சகோதரி): – 416 269 1780