கொரோனா நிவாரணப் பணிக்கு உதவிக்கரம் கோரல்

சிவமயம்

பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்தும்

                      இருள்தீர எண்ணிச் செயல்

                                    குறள் – 675

 

கொரோனா நிவாரணப் பணிக்கு உதவிக்கரம் கோரல்

 

அன்புடையீர் வணக்கம்!

தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந் நிலையில் சமூக விலகலை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நோய் பரவலை கட்டுப்படுத்தலாம் என்ற கருத்தினை உலகில் உள்ள அரச நிர்வாகங்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றன. அதேவேளை எமது ஊரான காரைநகரிலும் இந் நடைமுறை இருப்பதானால் வாழ்வாதாரம் குறைந்த குடும்பத்தினர் தமது அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதற்கு பல இடர்களை எதிர்நோக்குகின்றனர். அவர்களின் இடர்களை நிவர்த்தி செய்வதற்கு காரைநகர் பிரதேச சபையும், காரைநகர்  அபிவிருத்திச் சபையினரும் இணைந்து எமது சபையினரிடம் வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளனர். அதனுடைய பிரதிகள் இதனுடன் இணைக்கப்படுகின்றன.

“பெற்றதாயும் பிறந்தபொன்னாடும் நற்றவ வானிலும் நனிசிறந்தனவே” அன்பான சுவிஸ் வாழ் காரை உறவுகளே!  2004ஆம் ஆண்டில் இருந்து நாம்  எமது தாய் சங்கமான  காரைநகர் அபிவிருத்திச்சபையுடன் இணந்து பல பணிகளும், சேவைகளும் ஆற்றிவருகின்றோம்.

காரைநகர் பிரதேச சபையும், காரைநகர் அபிவிருத்திச் சபையினரும் விடுத்த கோரிகைக்கு அமைவாக எமது  சபை  இயன்ற உதவித் தொகையினை வழங்குவதென தீர்மானித்துள்ளது. அன்பான சுவிஸ் வாழ் காரை உறவுகளே! தங்களால் இயன்ற 50.00 சுவிஸ் பிராங்களுக்கு குறையாத உதவித் தொகையினை கீழ் காணும் வங்கி இலக்கத்திற்கு 30.04.2020 முன்பதாக அனுப்பிவைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

UBS Sparkonto

IBAN CH34 0023 5235 1146 15M1K

Konto – Nr. : 235-114615.M1K

Inhaber: Swiss – karai Abiviruththisabai

MWST- Nummer: CHE-116 303 292 MWST

 

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” உலகில் பரந்து வாழும் மானிடர் இன்புற்று வாழ எல்லாம் வல்ல ஈழத்துச் சிதம்பர சௌந்தராம்பிகா சமேத சுந்தரேஸ்வரப் பெருமானை  பிரார்த்திக்கின்றோம்.

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

 

இங்ஙனம்

                சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

               செயற்குழு உறுப்பினர்கள்

       மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்

06.04.2020