களபூமியில் முத்தமிழ் பேரவையின் கலை விழா 26.10.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலையில் ஆசிரியர் திருமதி கமலாம்பிகை லிங்கேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

விருந்தினர்களாக யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் வே.முருகமூர்த்தி,கிராமசேவையாளர் இ.திருப்புகழூர்சிங்கம்,காரைநகர் பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் வீ.கண்ணன்,யாழ் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை விரிவுரையாளர் கலாநிதி திருமதி வீரமங்கை யோகரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.மாதர் சங்கத் தலைவி திருமதி ந.இராசமலர் அவர்களின் சேவையைப் பாராட்டி இவ்விழாவில் மதிப்பளிக்கப்பட்டது.