கந்தசஷ்டி உற்சவம் 24.10.2014 வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி உள்ளது.

காரைநகரில் உள்ள அனைத்து முருகன் ஆலயங்களிலும் தினமும் விசேட அபிஷேக பூசை வழிபாடுகளும் கந்த புராணபடலம் ஓதல் சுவாமி திருவீதி உலா வருதல் என்பன இடம்பெற்று வருகின்றது. கிழவன்காடு கந்தசுவாமி கோயிலில் நேற்று நடைபெற்ற கந்தசஷ்டி உற்சவ நிகழ்வும் சுவாமி திருவீதி உலா வரும் காட்சியும்.

கூட்டுப்பிரார்தனை ஆலயங்களில் அருகி வருகின்ற போதிலும் கிழவன்காடு கலா மன்றம் அதற்குப் புத்துயிர் கொடுத்து வருகின்றது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இங்கு கூட்டுப்பிரார்த்தனை சிறப்பாக நேரம் தவறாது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது