கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா இன்று வியாழக்கிழமை (09.01.2020) கனடா செல்வமலைப் பிள்ளையார் கோயிலில்(Richmond Hill Hindu Temple) பலநூற்றுக்கணக்கான அடியவர்களின் அரோகரா குரல் ஒலிக்க, தவில் நாதசுவர இசை முழங்க மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவாதிரைத் திருவிழா இன்று வியாழக்கிழமை (09.01.2020) கனடா செல்வமலைப் பிள்ளையார் கோயிலில்(Richmond Hill Hindu Temple) பலநூற்றுக்கணக்கான அடியவர்களின் அரோகரா குரல் ஒலிக்க, தவில் நாதசுவர இசை முழங்க மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அதிகாலை 5:00 மணிக்கு நடராசப் பெருமானுக்கு ஆதிரை அபிசேகம் தொடங்கி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காரைநகரைச் சேர்ந்த சிறார்களின் இன்னிசைக் கச்சேரி இடம்பெற்றது.

தொடர்ந்து மணிவாசகப் பெருமான் அருளிய திருவெம்பாவைப் பாடல்களை இசைக்க தில்லைப்பெருமானுக்கு ஆலய அந்தணப்பெருமக்கள் பூசை வழிபாடுகளை ஆகம முறைப்படி நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து தவில் நாதஸ்வர கான மழை பொழிய பக்தர்களின் அரோகரா ஒலியுடன் நடராசப்பெருமான் ஆனந்தத் தாண்டவமாடிய வண்ணம் வீதியுலா வரும் அருள்காட்சியும் இடம்பெற்றது.

பெருந்திரளான சிவனடியார்கள் ஆடவல்லானின் அருள்காட்சியைக் கண்டு இன்புற்றனர்.

 

படங்களை பார்வையிட கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

                                https://photos.app.goo.gl/y5UJZepMjm16S73x6