ஆயிலி சிவஞானோதயா வித்தியாசாலையில் இரு மாடிக்கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று திங்கட்கிழமை காலை 6.30 மணிக்கு இடம்பெறுகின்றது.

பாடசாலை அதிபர் இ.வசீகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வே.கந்தையா,காரைநகர் பிரதேசசபை உறுப்பினர் க.பாலச்சந்திரன்,காரைநகர் கோட்டக் கல்விப்பணிப்பாளர் பு.ஸ்ரீவிக்னேஸ்வரன், யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் வே.முருகமூர்த்தி,ஆகியோர் அடிக்கல்லை நாட்டிவைத்தனர்.

சுவிஸ் நாட்டில் வதியும் பாடசாலையின் பழைய மாணவர் சுப்பிரமணியம் கதிர்காமநாதனின் நிதியுதவியுடன் இந்த இருமாடிக் கட்டடம் அமைக்கப்பட உள்ளது.