கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் நடத்தப்படும்
திருவாதிரைத் திருவிழா எதிர்வரும் 09ஆம் திகதி(09.01.2020) வியாழக்கிழமை
அதிகாலை 4.15 மணிக்கு நடராசப் பெருமானுக்கு ஆதிரை அபிசேகம் தொடங்கி நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து காலை 7.00 மணிக்கு ஆருத்திரா தரிசனம் இடம்பெற்று, நடராசப்பெருமான் ஆனந்தத் தாண்டவமாடிய வண்ணம் வீதியுலா வரும் அருள்காட்சியும் இடம்பெறும். அவ்வமயம் மெய்யடியார்கள் வருகைதந்து ஆடவல்லானின் திருவருளால் இகர நலன் பெற்று இன்புற அன்புடன் அழைக்கின்றோம்.
அபிசேகத் திரவியங்களை கொடுத்துதவ விரும்பும் அடியார்கள் அதிகாலை 4.15 மணிக்கு முன்பதாக கோயிலில் கையளிக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
நிதியுதவி செய்ய விரும்புகின்ற அடியார்கள் அன்றய தினம் ஆலயத்தில் நேரடியாக பொருளாளரிடம் வழங்கலாம் அல்லது நிர்வாகத்திற்கு (647) 339-5481 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாகவோ அல்லது மின்னஞ்சல் ஊடாகவோ அறியத்தர முடியும்.
தொலைபேசி இலக்கம்: (647) 339-5481 மின்னஞ்சல்: karainagar@gmail.com
நன்றி
நிர்வாக சபை
கனடா-காரை கலாச்சார மன்றம்