மரண அறிவித்தல்,திரு.கார்த்திகேசு இராமநாதன் (பயிரிக்கூடல், காரைநகர்)

 

மரண அறிவித்தல்

திரு.கார்த்திகேசு இராமநாதன்

சிங்கப்பூரைப்பிறப்பிடமாகவும் பயிரிக்கூடல் காரைநகரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.கார்த்திகேசு இராமநாதன் அவர்கள் 10.11.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அமரத்துவம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு வள்ளியம்மை தம்பதிகளின் இளைய புத்திரனும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

பாலாம்பிகையின் ஆருயிர் கணவரும்,

நடராசா(ஓய்வு நிலை அதிபர்), காலஞ்சென்ற சுப்பிரமணியம்(துறைமுக அதிகாரசபை) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

கிற்ரா(ஆசிரியர், சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம்), ஜசிந்தா(பிரதேச செயலகம், காரைநகர்),சுகிர்தா(பிரதேச செயலகம், காரைநகர்) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,

தவராசா (ஆரணி பான்சி), நவகிருஷ்ணராசா (இலங்கை வங்கி முகாமையாளர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லக்ஷிகா,மயூரன்,ஹரணிகா,கயலஷ்கன்,ஜதுசா,ராபிஷா ஆகியோரின் பேரனும்,

காலஞ்சென்றவர்களான கமலாவதி,மதங்கசூடாமணி மற்றும் சரஸ்வதி,கோசலாதேவி,சேனாதிராசா,ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற கணேசபிள்ளை மற்றும் மீனாட்சிசுந்தரம் ஆகியோரின் சகலனும்,

வைத்திலிங்கம் மற்றும் காலஞ்சென்ற மகாலட்சுமி ,நவரத்தினம் ,அன்னலட்சுமி ஆகியோரின் சம்மந்தியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11.11.2019 திங்கட்கிழமை மு.ப. 10:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகன கிரியைக்காக சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்