ரொரன்ரோ விமானநிலையம் வந்தடைந்த “காரை வசந்தம்-2019” இன் பிரதம விருந்தினர் காரைநகர் அபிவிருத்திச் சபை தலைவர் திரு.இராமநாதன் சிவசுப்பிரமணியம் அவர்களை கனடா-காரை கலாச்சார மன்ற தலைவர்,செயலாளர் மற்றும் மன்ற தொண்டர்களும் வரவேற்றனர்.

 

ரொரன்ரோ விமானநிலையம் வந்தடைந்த “காரை வசந்தம்-2019” இன் பிரதம விருந்தினர் காரைநகர் அபிவிருத்திச் சபை தலைவர் திரு.இராமநாதன் சிவசுப்பிரமணியம் அவர்களை கனடா-காரை கலாச்சார மன்ற  தலைவர்,செயலாளர் மற்றும் மன்ற தொண்டர்களும் வரவேற்றனர்.

காரைநகர் மக்கள் ஒன்றிணைந்து எடுக்கும் வரலாற்று சிறப்புமிக்க விழாவாக 19 வது காரை வசந்தம் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு (OCT 13, 2019) ரொரன்ரோ தமிழ் இசைக் கலா மன்ற மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இளையவர் முதல் பெரியோர் வரை கலந்து ஊர் நினைவுகளை மீட்டு, உறவு கொண்டாடி மகிழும் இனிமையானதொரு வசந்தமாக அன்றைய தினம் அமையவுள்ளது.

இந்நாளில் எம் காரை மண்ணின் நினைவாக கலந்து சிறப்பிக்குமாறு அனைத்து கனடா காரை நல்லுள்ளங்களையும் கேட்டுக் கொள்கின்றேம்.