மரண அறிவித்தல், திரு.இரத்தினம் செந்தில்நாதன் (செந்தில்) (முல்லைப்பிலவு,காரைநகர்) (பிரான்ஸ் போ – PAU)

மரண அறிவித்தல்

திரு.இரத்தினம் செந்தில்நாதன் (செந்தில்)

காரைநகர் முல்லைப்பிலவை பிறப்பிடமாகவும் தற்போது பிரான்ஸ் போ (PAU) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் செந்தில்நாதன் (செந்தில்) அவர்கள் 04.10.2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இரத்தினம் சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற நவரத்தினம் மற்றும் லீலாவதி அவர்களின் மருமகனும்,

இராஜேஸ்வரியின் (பிரான்ஸ்) அன்புக் கணவரும்,

செந்தூரன்,சஜீவன்,சுஜந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவமலர்,தவமலர் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

சுந்தரமூர்த்தி,காலஞ்சென்ற தருமரட்ணம் ஆகியோரின் மைத்துனரும்,

றஞ்சினி,சிவகரன்,விக்னராஜ்,நந்தனாசியா,கிருபராஜ்,லக்ஸ்மணராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிச் சடங்குகள் பிரான்ஸ் (PAU) இல் 11.10.2019 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்; ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கோள்கின்றோம்.

தகவல்:
சகோதரிகள் (சிவமலர்,தவமலர்)

தொலைபேசி இலக்கம்: +94755161014