காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தின் சுந்தர நிலா பல்சுவை மலர் வெளியிட்டு நிகழ்வு 30.07.2019 செவ்வாய்க்கிழமை காலை 9:00 மணிக்கு பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

 

காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தின் சுந்தர நிலா பல்சுவை மலர் வெளியிட்டு நிகழ்வு 30.07.2019 செவ்வாய்க்கிழமை காலை 9:00 மணிக்கு பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

பாடசாலையின் முதல்வர் திரு.அ.சாந்தகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக வைத்திய கலாநிதி.சுப்பிரமணியம் சுவாமிநாதன் (ஓய்வு பெற்ற வைத்திய அதிகாரி) அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு.ஆ.குமரேசமூர்த்தி (கோட்டக் கல்வி அலுவலர்,காரைநகர்) அவர்களும், கௌரவ விருத்தினார்களாக திரு.அ.தில்லையம்பலம்(ஓய்வு நிலை அதிபர்), திரு.ச.தனுஜன்(கலாசார உத்தியோகத்தர் பிரதேச செயலகம்,காரைநகர்), திரு.தி .கோபிநாத் (சூழலியளாளர்) அவர்களும் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.அத்துடன் மாணவர்களின் கலை நிகழ்வுகளுடன் இனிதே நிறைவுற்றது.

மலர் வெளியீட்டுக்கான அனுசரணையினை அமரர் திரு.திருமதி கோபாலபிள்ளை தம்பதிகளின் மகன் திரு.கோ.தவக்குமார் அவர்கள் வழங்கியிருந்தார்.