கால் நூற்றாண்டில் கால் பதிக்கும் கண்ணியத்துடன் களமிறங்கும் ”காரைச் சங்கமம் 2014”

பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கம் பெருமையுடன் முன்னெடுக்கும் கோடைகால ஒன்றுகூடலான ''காரைச் சங்கமம் 2014'' இக்கு அனைவரையும் சங்கமிக்குமாறு அன்புடன் அழைக்கின்றது பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கம்.

பிரதம விருந்தினர்கள் :- இலங்கையில் இருந்து வருகை தந்திருக்கும் பிரபல வர்த்தகரும், காரை அபிவிருத்திசபையின் கடந்த கால நிர்வாகசபையின் செயலாளருமான திரு.இரத்தினகோபால் ஜெயராஜா அவர்களும் பிரபல வர்த்தகரும் Jaffna Herritage உரிமையாளருமான திரு.S.T.பரமேஸ்வரன் அவர்களும் Queency Book Depot உரிமையாளர் திரு.சுந்தரலிங்கம் கணநாதன் அவர்களும் ,

கெளரவ விருந்தினர்களாக:- எமது மண்ணின் மகுடம் இளையதம்பி தயானந்தா அவர்களும் , சுவிஸ் காரை அபிவிருதிசபையின் தலைவர் திரு பூபாலபிள்ளை விவேகானந்தா அவர்களும் , மற்றும் பிரான்ஸ் காரை நலன் புரிச் சங்க செயலாளர் திரு.அருளானந்தம் செல்வச்சந்திரன்( நேரு மாஸ்டர்) அவர்களும் , கனடாவில் இருந்து வருகை தந்திருக்கும் கனேடிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ஸ்த்தாபகர் திரு. இளையபாரதி அவர்களும்

சிறப்பு விருந்த்தினர்களாக:- ஸ்ரீ யோகி ராம் சுந்தர் அவர்களும் , ஜெர்மனியில் இருந்து வருகை தந்திருக்கும் திரு. விஜயரத்தினம் சத்தியசாய்பாபா( சாயி) ஆகியோர் பங்கேற்று சிறப்பிக்கின்றனர்.

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றது பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கம்.