02/02/2019 சனிக்கிழமை அன்று நடைபெற்ற காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டி-2019
02/02/2019 சனிக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு பாடசாலை மைதானத்தில் கல்லூரி அதிபர் திரு.வி.சாந்தகுமார் தலைமையில் இடம்பெற்றன. இந் நிகழ்வில் திரு.ப.நந்தகுமார் (சுகாதார வைத்திய அதிகாரி காரைநகர்,ஊர்காவற்துறை) பிரதம விருந்தினராகவும் திரு.க.விஜயகுமார் (முகாமையாளர் மக்கள் வங்கி சாவகச்சேரி)சிறப்பு விருந்தினராகவும், திரு.S.V.M.குணரட்ணம் (S.V.M நிறுவன உரிமையாளர்) திரு. க. நிமலதாசன்(அஞ்சல் அதிபர் யாழ்ப்பாணம்) மற்றும் திரு.திரவியநாதன் தீசன்(பத்திரிகை ஆசிரியர் கனடா) ஆகியோர் கௌரவ விருந்தினராகவும், கலந்துகொண்டனர்.
பாடசாலையின் உயர்தர மாணவிக்கு அமரர் பொன்னம்பலம் பாலசிங்கம் (இடைப்பிட்டி காரைநகர்) அவர்களின் ஞாபகார்த்தமாக துவிச்சக்கரவண்டி அன்பளிப்பிணை செய்திருந்தார் ஆசிரியர் லிங்கேஸ்வரன் கமலாம்பிகை அவர்கள்.அத்துடன் ஆரம்ப பாடசாலையில் தரம் 1இல் கல்விகற்கும் மாணவிக்கு முன்னைநாள் தலைவர் (களபூமி சனசமூக நிலையம்) கணேசப்பெருமாள் மயில்வாகனம் (பிரான்ஸ்)அவர்களினால் இலங்கை வங்கி புத்தகத்தில் 10000.00 ரூபா வரவு வைக்கப்பட்டு களபூமி சனசமூகநிலையத்தின் பொ ருளாளர் திரு .சி.சிவகாரன் அவர்களினால் மாணவியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.அத்துடன் திரு.க.விஜயகுமார் முகாமையாளர் (மக்கள் வங்கி சாவகச்சேரி)அவர்களினால் புதிய ஓர் திட்டம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.பாடசாலையின் பழையமானவர்களிடம் இருந்து மாதாந்தம் 100.00ரூபா அறவிடுவார்களாயின் அந்த நிதியில் எதிர்காலத்தில் சிறந்த திட்டங்களை மேற்கொள்ளமுடியுமென தனது சிறப்பு உரையில் கூறியிருந்தார் கலாநிதி .ப.நந்தகுமார் தனது தந்தையர் பாடசாலையின் பழைய மாணவன் என்ற ரீதியில் 1000.00ரூபா பாடசாலை அதிபரிடம் கொடுத்து ஆரம்பித்து வைத்தார்.அத்துடன் திரு க.விஜயகுமார் (பழைய மாணவன்)மாதாந்தம் தனது ஊதியத்தில் இருந்து 500.00 ரூபா தொடர்ந்து 5 வருடங்களுக்கு கொடுப்பதாக உறுதியளித்துள்ளார். மற்றும் திரு.தி. தீசன்( கனடா ) ஆகியோர் ஒரு வருடத்திற்க்கான பணத்தினை வழங்கியிருந்தனர்.