காரைநகர் இளம் விவசாயிகள் கழகத்தின் ஏற்பாட்டில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபயணமும் 05.02.2018 செவ்வாய்க்கிழமை காரைநகரில் இடம்பெற உள்ளது.

 

காரைநகர் இளம் விவசாயிகள் கழகத்தின் ஏற்பாட்டில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபயணமும் 05.02.2018 செவ்வாய்க்கிழமை காரைநகரில் இடம்பெற உள்ளது.

காலை 8.00 மணிக்கு காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி முன்றலில் இருந்து விழிப்புணர்வு நடைபயணம் ஆரம்பமாக உள்ளது. இந்த நடைபயணம் காரைநகர் பிரதேச கலாசார மத்திய நிலையத்தை வந்தடைந்ததும் தொடர்ந்து அங்கு 9.00 மணியளவில் விழிப்புணர்வ நிகழ்சி இடம்பெற உள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக காரைநகர், ஊர்காவற்றறை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியக் கலாநிதி ப.நந்தகுமாரும் சிறப்பு விருந்தினராக விவசாயத் திணைக்கள பிரதி மாகாணப் பணிப்பாளர் திருமதி எஸ்.அஞ்சனாதேவியும் மாண்புறு விருந்தினர்களாக காரைநகர் பிரதேச செயலர் திருமதி உஷா சுபலிங்கம், காரைநகர் பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.கேதீஸ்வரதாஸ், தொழிலதிபர் கலைமாடக்கோண் சண்முகம் சிவஞானம் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.