மரண அறிவித்தல், திருமதி வசந்தா ராமச்சந்திரன் (பயிரிக்கூடல்,காரைநகர்) (வவுனியா)

 

மரண அறிவித்தல்

திருமதி வசந்தா ராமச்சந்திரன்

காரைநகர், பயிரிக்கூடலைப் பிறப்பிடமாகவும் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வசந்தா ராமச்சந்திரன் அவர்கள் 27.12.2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் கந்தையா ராமச்சந்திரனின் (சாயி கொமினிக்கேசன், வவுனியா) அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான சுப்பிர மணியம்,மதங்கசூடாமாணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா,லோகநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும், வசந்தகுமார் (ஆசிரியர் வெஸ்லி கல்லூரி), விஜயகுமார் (லண்டன்), வனயா (கனடா), வனயகுமார் (T.O. NHDA கிளிநொச்சி) ஆகியோரின் அன்புச் சகோதரியும், சுசிலாதேவி (இளைப்பாறிய ஆசிரியை), சுலோசனாதேவி, ஜெயதேவி, பாலச்சந்திரன், ரவிச்சந்திரன் (லண்டன்), நவமலர்தேவி (பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30.12.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் காரைநகர் பயிரிக்கூடலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
வனஜா தர்மரட்ணம் (கனடா) +1 416 900 3921