மரண அறிவித்தல்
திரு. பொன்னம்பலம் அருளானந்தம்
(ஓய்வுநிலை அதிபர், சிங்கப்பூர்)
(காரைநகர், கோவளம் – மலேசியா)
காரைநகர், கோவளத்தைப் பிறப்பிடமாகவும் மலேசியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஓய்வுநிலை அதிபர் திரு.அருளானந்தம் 30-11-2018 மலேசியாவில் சிவபதமடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்புப் புதல்வனும் காலஞ்சென்றவர்களான சண்முகம், லக்சுமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும் அன்னபாக்கியத்தின் ஆருயிர்க் கணவனும் சுசீலா, Dr.சறோஜா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 1-12-2018 சனிக்கிழமை நடைபெற்று பூதவுடல் மலேசியாவிலுள்ள இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் தயவுசெய்து ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்.