அமரர் சுப்பிரமணியம் உருத்திரர் (உருத்தி) அவர்களின் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி

 

நான்காம் ஆண்டு நினைவுப்பூக்கள்

 

நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டதோ

நம்பவே முடியவில்லை எங்களால்

நல்ல நினைவுகளை என் மனதில்

விதைத்து விட்டு விண்ணுலகம் தான்

விரைந்து சென்றீர்களோ நீங்கள்

இவ்வுலகில்  வாழ்வது கடினம் என

நினைத்து காலன் உங்களை அழைத்தானோ

காதலும் கடமையும் காத்திருக்க

காலனுடன் ஏன் சேர்ந்து சென்றீர்கள்

விண்ணுலகில் நீங்கள் வாழ

மண்ணுலகில் நான் வாழ விதி

செய்த சதியோ———-

மறைக்கவே  முடியவில்லை உங்களை

மனமார  வேண்டுகிறேன் உங்கள்

ஆத்மா சாந்தியடைய

இப்படிக்கு

உங்கள் நினைவுகளில்

மனைவி பிள்ளைகள்.