காரைநகர் சுப்பிரமணியம் வீதியில் அமைந்துள்ள காரை கிட்ஸ் பார்க் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா 29/06/2014 ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.

காரை கிட்ஸ் பார்க் பாலர் பாடசாலையின் தலைவர் பண்டிதர் மு.சு. வேலாயுதபிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டு விழாவில் பிரதம விருந்தினராக வடமாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர் க.சத்தியபாலன் அவர்களும் சிறப்பு விருந்தினராக ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியக் கலாநிதி திருமதி ப. ஆனந்தராஜ் அவர்களும் கௌரவ விருந்தினராக யாழ் இந்துக்கல்லூரி முன்னாள் அதிபரும் உரும்பிராய்,திருநெவ்வேலி கிட்ஸ் பார்க் பாலர் பாடசாலைகளின் தலைவருமான அ.பஞ்சலிங்கம் அவர்களும் கலந்து கொண்டதுடன்

காரைநகர் பிரதேச சபைத் தவிசாளர் வே.ஆணைமுகன்,எதிர்க் கட்சித் தலைவர் வீ.கண்னன்,பிரதேச சபை உறுப்பினர் க.பாலச்சந்திரன்,பிரித்தானிய காரை நலன்புரிச் சங்கத் தலைவர் ப.தவராசா, காரைநகர் அபிவிருத்திச் சபையின் உப தலைவரும் யாழ்ற்ரன் கல்லூரி அதிபருமான வே.முருகமூர்த்தி, காரைநகர் அபிவிருத்திச் சபையின் செயலாளரும் கிராமசேவையாளருமான இ.திருப்புகழூர்சிங்கம்,காரை கிட்ஸ் பார்க் பாடசாலைக்கான காணியினை நன்கொடையாக வழங்கியவர்களில் ஒருவரான இராமநாதர் சிவசுப்பிரமணியம்,வியாவில் ஜயனார் ஆலய அறங்காவலரும் முன்னாள் காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவருமான மகாராணி க. சோமசேகரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.