காரைநகர் கசூரினா பீச் சுற்றுலாத் தலத்தில் வடமாகாணசபையின் பலமில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட பாரம்பரிய உணவகம் இன்று 24.10.2018 புதன்கிழமை மாலை 4 மணிக்கு வடமாகாண முதலமைச்சர் கெளரவ சி.வி.விக்னேஸ்வரன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

காரைநகர் கசூரினா பீச் சுற்றுலாத் தலத்தில் வடமாகாணசபையின் பலமில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட பாரம்பரிய உணவகம் இன்று 24.10.2018 புதன்கிழமை மாலை 4 மணிக்கு வடமாகாண முதலமைச்சர் கெளரவ சி.வி.விக்னேஸ்வரன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டு பிரதேச சபையிடம் கையளிக்கப்பட்டது.

 

காரைநகர் கசூரினாக் கடற்கரையில் சுமார் 11.43 மில்லியன் ரூபா செலவில் புதிதாக அமைக்கப்பட்ட அம்மாச்சி உணவகத்தை முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இன்று மாலை திறந்த வைத்தார்

இன்றைய தினம் இந்த அம்மாச்சி உணவகம் காரைநகர் பகுதியில் சிறப்பாகத் திறந்து வைக்கப்படுகின்றது. எமது பகுதிகளில் கிடைக்கக் கூடியதும் தமிழர்களின் உணவுப் பழக்க வழக்கங்களை பிரதி பலிக்கின்றதுமான உணவுகள் உடனேயே தயாரித்து சுடச்சுட வழங்கப்பட இருக்கின்றது. கசூரினாக் கடற்கரை சிறப்பாக இயங்கும் போது இப்பகுதிகளுக்கு வரும் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் அதனால் அம்மாச்சி உணவகத்தின் விற்பனைகளும் அதிகரிக்கும் அத்தடன் எமது பாரம்பரிய உணவுகளை ஏனைய இனத்தைச் சார்ந்த மக்களும் உண்டு மகிழ்வதற்கு ஏற்ற வகையாக இந்த உணவகம் தமது சேவைகளை விஸ்தரிக்க இருக்கின்றது.

இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்.

நேற்று புதன்கிழமை மாலை காரைநகர் கசூரினாக் கடற்கரையில் அவரது அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ் சுமார் 11.43 மில்லியன் ரூபா செலவில் புதிதாக அமைக்கப்பட்ட பாரம்பரிய உணவு வகைகளை சமைத்து வழங்கக் கூடிய அம்மாச்சி உணவகத்தை திறந்த வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

காரைநகர் பிரதேச சபைத் தவிசாளர் வி.கேதீஸ்வரதாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மேலும் அவர் உரையாற்றுகையில்

இரண்டு ஜேர்மன் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசும் போது அவர்களின் சம்பாசனைகள் ஜேர்மன் மொழியில் இருக்கும் அதே போன்று இரண்டு ரஷ்யா நாட்டு நபர்கள் சந்திக்கும் போது ரஷ்ய மொழியில் பேசுவார்கள் இரண்டு ஆங்கிலேயர்கள் ஆங்கில மொழியில் பேசுவார்கள் ஆனால் இரண்டு தமிழர்கள் ஒருவரை ஒருவர் வடகிழக்குக்கு வெளியே சந்திக்கும் போது தமிழில் பேசமாட்டார்கள். மாறாக ஆங்கிலத்திலோ அல்லது பிறிதொரு பாஷையிலோ தான் பெரும்பான்மையானோர் பேசுவார்கள்

அதே போன்று எம்மவர்களுக்கு அம்மாச்சி என்ற உரிமையுடன் கூடிய பாரம்பரிய தமிழ்ச் சொல்லை பயன்படுத்துவதில் சிலருக்கு இஷ்டம் இல்லை மாறாக ‘கெலபொஜின்’ என்ற சிங்களப் பதத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று துடியாகத் துடிக்கின்றனர். எமது அலுவலர்களும் பிரதி அமைச்சரைப் பகைக்கக் கூடாது என்ற அடிப்படையில் அம்மாச்சி என்பதற்குப் பதிலாக ‘கெலபொஜனுக்குப் பதில் பாரம்பரிய உணவகம் என மாற்றிவிட்டார்கள்.

தங்கள் அன்புத் தாயாராகிய இலட்சுமிப் பிள்ளையின் பெயரை சிங்கள ஆட்சியாளர்கள் கோவிப்பார்கள் என்ற காரணத்தினால் பொடிமெனிக்கே என்று மாற்றக்கூடிய சிந்தனையாளர்களே இன்று அம்மாச்சி என்ற பெயரை மெல்ல நீக்கி பாரம்பரிய உணவகம் என மாற்ற முனைந்திருக்கிறார்கள்.

நான் இறுக்கமாகக் கூறிவிட்டேன் அம்மாச்சி என்னும் பெயர் காணப்படின் மட்டும்தான் நான் இந்தத் திறப்ப விழாவிற்கு வருவேன் என்று. எமது பகுதியில் எமது மாகாண சபையின் நிதியிலிருந்து அமைக்கப்பட்ட உணவகத்திற்கு அன்பு கலந்த அம்மாச்சி என்ற பெயரை வைப்பதற்கு இவ்வளவு தடைகள் எனின் ஏனைய விடயங்கள் பற்றிக் கூறத் தேவையில்லை ஒவ்வொரு தமிழ் அரசியல் வாதிகளும் மற்றும் அலுவலர்களும் சுயமாகச் சிந்திக்க திராணையற்றவர்களாக அரசாங்கத்தின் அடிவருடிகளாக அவர்களைத் திருப்திப் படுத்துகின்ற அநாகரிக செயல்களில் ஈடுபட்டு வருவது வேதனைக்குரியது. ஆழும் வர்க்கத்தின் செல்லப்பிள்ளைகளாக என்றென்றும் இருக்க விரும்புகின்ற சிலரின் அப்பட்டமான கீழ்த்தரமான நடவடிக்கைகளாளேயே சிங்கள் ஆட்சியாளர்கள் எம்மீது குதிரை விடப் பார்க்கிறார்கள். நான் சிங்களச் சகோதரர்களைக் குறைகூற வரவில்லை என் தமிழ் சகோதர சகோதரிகளின் வருத்தத்திற்குரிய செயற்பாட்டையே கூற வருகின்றேன்.

இன்றைய தினம் இந்த அம்மாச்சி உணவகம் காரைநகர் பகுதியில் சிறப்பாகத் திறந்து வைக்கப்படுகின்றது. எமது பகுதிகளில் கிடைக்கக் கூடியதும் தமிழர்களின் உணவுப் பழக்க வழக்கங்களை பிரதி பலிக்கின்றதுமான உணவுகள் உடனேயே தயாரித்து சுடச்சுட வழங்கப்பட இருக்கின்றது. கசூரினாக் கடற்கரை சிறப்பாக இயங்கும் போது இப்பகுதிகளுக்கு வரும் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் அதனால் அம்மாச்சி உணவகத்தின் விற்பனைகளும் அதிகரிக்கும் அத்தடன் எமது பாரம்பரிய உணவுகளை ஏனைய இனத்தைச் சார்ந்த மக்களும் உண்டு மகிழ்வதற்கு ஏற்ற வகையாக இந்த உணவகம் தமது சேவைகளை விஸ்தரிக்க இருக்கின்றது.

முன்னாள் விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் அவர்களின் சிந்தனையில் உதித்த நல்லதொரு செயற்பாட்டிற்கு செயல்வடிவம் வழங்கவேண்டியது எமது அனைவரதும் கடமையாகும்.

நான் கடந்த ஐந்த வருடங்களாக வடபகுதியில் முதலமைச்சராகப் பணிபுரிந்து வருவது பலருக்கு மிக்க இடைஞ்சல்களைக் கொடுத்திருப்பதை நான் உணர்கின்றேன் ஒவ்வொருவரும் தாம் தாம் நினைத்த வகையில் செயற்படுவதற்கும் தமது நேர்வழியற்ற சிந்தனைகளை நடைமுறைப் படுத்துவதற்கும் எனது இருப்பு மிக்க இடைஞ்சல்களைக் கொடுத்திருப்பதாக உணர்கின்றேன்.வடமாகாண சபையின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவு பெறுவதால் இனி நினைத்தபடி செயலாற்ற முடியுமென தயவு செய்து ஒருவரும் எண்ண வேண்டாம் எமது பதவி நிறைவுறுத்தப்பட்டாலும் தழிழர்களின் விடயங்களில் நாம் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருப்போம் எனத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

முஸ்லீம் இனத்தைச் சார்ந்த மக்கள் தாம் பல்வேறு கட்சிகளாக அரசியல் முன்னெடுப்புக்களில் பிரிந்து நின்று செயற்படுகின்ற போதும் முஸ்லிம் இனத்தின் நலனுக்கெதிரான வகையில் ஏதாவது நிகழ்வுகள் அல்லது வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போது அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு தமது அரசியல் வேறுபாடுகளை மறந்து தமது உரிமைக்கான ஏகோபித்த குரலைக் கொடுத்து தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள். எம்மவர்களோ மற்றையவர்களின் குலம் கோத்திரத்தை ஆராய்வதில் பொழுதைக் கழிக்கிறார்கள்.என்றார்.

இன்று 24.10.2018 புதன்கிழமை மாலை 4 மணிக்கு வடமாகாண முதலமைச்சர் கெளரவ சி.வி.விக்னேஸ்வரன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டு பிரதேச சபையிடம் கையளிக்கப்பட்டது.