வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கத்தினால் வருடம் தோறும் முன்னெடுக்கப்பட்டுவரும் வட மாகாண பண்பாட்டுப்பெருவிழா 30.09.2018 ஞாயிற்றுக்கிழமை கற்சிலைமடு பண்டாரவன்னியன் வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

இரண்டு நாட்கள் இடம் பெற்ற வடக்கு மாகாண பண்பாட்டுப்பெருவிழாவில் மாகாணத்தில் சிறந்த கலைஞர்கள் மதிப்பளிக்கப்பட்டதுடன் அவர்களில் தெரிவு செய்யப்பட்டோருக்கு வடக்கு மாகாணத்தின் அதி உயர் விருதான முதலமைச்சர் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.