18வது ஆண்டாக வீசவுள்ள காரைவசந்தம் சனிக்கிழமை SEPT 22, 2018 தமிழிசைக் கலா மன்ற மண்டபத்தில்

18வது ஆண்டாக வீசவுள்ள காரைவசந்தம்

சனிக்கிழமை SEPT 22, 2018 தமிழிசைக் கலா மன்ற மண்டபத்தில்

 

கனேடிய பல்கலாச்சார மண்ணில் காரை மாதாவை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் காரைநகர் மக்கள் ஒன்றிணைந்து எடுக்கும் வரலாற்று சிறப்புமிக்க விழாவாக 18 வது காரை வசந்தம் வருகின்ற சனிக்கிழமை Sept 22, 2018 மலரவுள்ளது. கோடை கால இறுதிப்பகுதியில் இளையவர் முதல் பெரியோர் வரை கலந்து ஊர் நினைவுகளை மீட்டி, உறவு கொண்டாடி மகிழும் இனிமையானதொரு வசந்தமாக அன்றைய தினம் அமையவுள்ளது..

இயல் , இசை, நாடகம் என்கின்ற முத்தமிழ் விழாவாக சிறுவர்களின் மேடைப்பேச்சாற்றல்கள், சிறப்பு நடன நிகழ்வுகள், கலகலப்பாக சிரிக்க வைக்கும் தெருக்கூத்து நாடகம் , பொன்மாலைப்பொழுதை தாலாட்டும் மெல்லிசை கானங்கள் என்ற பல்வேறு நிகழ்வுகளுடன் வீசப்போகின்றது காரை வசந்தம் 2018.

விழாவில் கலந்துகொள்வோரின் நலன்கருதி சிற்றுண்டி வகைகளும், தேநீரும் பரிமாறப்படவுள்ளதோடு , விழா நிகழ்ச்சிகளின் இறுதியில் இரவு உணவும் வழங்கப்படும்.

இந்நிகழ்வு சிறப்படையவும், காரை மக்களின் பெருமையை கனேடிய பல்கலாச்சார மண்ணில் எடுத்தியம்பவும், கனடா வாழ் காரை மக்களுடன் பூமிப்பந்தில் பரந்து வாழும் காரை நல்லுள்ளங்களிற்கு அழைப்பு விடுக்கின்றோம். அனைவரும் வருக. காரை மண்ணின் புகழ் பரவச் செய்வோம். ….! நன்றி!

 

நிர்வாகம்

கனடா காரை கலாச்சார மன்றம்