காரைநகர் பிரதேச செயலர் பிரிவு பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான பெருவிளையாட்டுப் போட்டியின் இறுதிப் போட்டிகள் 22/06/2014 ஞாயிற்றுக்கிழமை சோலையான் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

காரைநகர் பிரதேச செயலர் பிரிவு பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான பெருவிளையாட்டுப் போட்டியின் இறுதிப் போட்டிகள் 22/06/2014 ஞாயிற்றுக்கிழமை சோலையான் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

காரைநகர் பிரதேச செயலர் திருமதி பாபு தேவந்தினி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாணக் காணி ஆணையாளர் பொ.தயானந்தா,வலிமேற்கு சங்கானைப் பிரதேச செயலர் அ.சோதிநாதன்,காரைநகர் கோட்டக்கல்விப் பணிப்பாளர் பு.ஸ்ரீவிக்னேஸ்வரன்,காரைநகர் பிரதேச சபைத் தவிசாளர் வே.ஆணைமுகன்,பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் வீ.கண்ணன்,பிரதேச சபை உறுப்பினர் க.பாலச்சந்திரன்,லண்டன் காரை நலன்புரிச்சங்க தலைவர் ப.தவராசா மற்றும் வர்த்தகர்களான ச.சிவஞானம்,ந.யோகநாதன்,ஸ்ரீமுருகன் தேவராசா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.நூற்றுக்கணக்கானோர் பார்வையாளர்களாகக் கலந்துகொள்ள விழா சிறப்பாக நடைபெற்றது.

கலாநிதி விளையாட்டுக் கழகம் முதலாம் இடத்தைப் பெற்றுச் சம்பியனானதுடன் இரண்டாம் இடத்தை அம்பாள் விளையாட்டுக்கழகமும் மூன்றாம் இடத்தை தோப்புக்காடு விளையாட்டுக்கழகமும் பெற்றுக்கொண்டன.