காரை ஒன்றுகூடல் – 2018 அனைவரும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கின்றது கனடா காரை கலாச்சார மன்றம்

காரை ஒன்றுகூடல் – 2018

அனைவரும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கின்றது கனடா காரை கலாச்சார மன்றம்

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 29.07.2018 அன்று Morningside Park, Area 1,2 and 5 இல் நடைபெறவுள்ள வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்விற்கு கனடாவில் வதியும் அனைத்து காரை மக்களையும் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடனும் அன்புடனும் அழைக்கின்றோம்.

சிறுவர்கள், பெரியோர்களிற்கான விளையாட்டு நிகழ்வுகளுடன் ஊர் நினைவுகளுடன் விருந்துண்டு மகிழவும் அழைக்கின்றோம்.

 

காலை 9.30 மணிக்கு முன்னர் ஒன்றுகூடலில் கலந்து கொள்ள வருகை தந்து பதிவினை மேற்கொள்ளும் முதல் 100 பேர்களிற்கு பெறுமதி மிக்க பரிசில்கள் வழங்கப்படும்.

 

காலை 8.30 மணியிலிருந்து 9.30 மணி வரை சுடச்சுட அப்பமும் அதனை தொடர்ந்து  மதிய போசனம், BBQ, ஊர் சுவையுடன் கூடிய சைவ  மற்றும் அசைவ  கூழ், மாலையில் கொத்து றொட்டியுடன் சுவை மிக்க இனிய கனடிய சோளம் இவற்றுடன் சிறுவர்களிற்கு தும்பு மிட்டாஸ், ஐஸ்கிறீம், Frezee மற்றும் குளிர் பானங்களுடன் நாள் முழுவதும் சுடச்சுட யாழ்பாண சுவையுடன் கூடிய கோப்பி என்பனவும் வழங்கப்படும்.

 

அனைத்து கனடா வாழ் காரை உறவுகளையும்  இந்நிகழ்வில்  ஊர் நினைவுகளோடு கலந்து சிறப்பித்து , கனடிய மண்ணில் காரைநகரின்  மகத்தான பெருமையையும், ஒற்றுமையினை நிலைநிறுத்துவோமாக.

 

நன்றி

 

        நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

[su_audio url=”http://www.karainagar.com/pages/wp-content/uploads/2018/07/CKCA-GET-TOGETHER-2018.mp3″ autoplay=”yes”]