காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியின் க.பொ.த. உயர்தர வகுப்பு மாணவர்களின் ஒன்று கூடலும் மதிய போசண விருந்தும் 08.06.2013 ஞாயிற்றுக்கிழமை பி.ப 12.30 மணிக்கு உயர்தர மாணவர் மன்றத்தலைவர் செல்வன்.த.யசோதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
பிரதம விருந்தினராக சங்கானைப்பிரதேச செயலாளர் திரு.அ.சோதிநாதன் (Yarltonian) அவர்களும் சிறப்பு விருந்தினராக தீவக வலய கல்விப்பணிமனைப் கணக்காளர் திருமதி கவிதா சாந்திநாயகம் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக Alliancz பிராந்திய முகாமையாளர் G. ஸ்ரீவரதன் (Yarltonian) அவர்களும் தீவக வலயக்கல்விப்பணிமனை நிர்வாக உததியோகத்தர் திரு.S.சற்குணராசா (Yarltonian) அவர்களும் அயல் பாடசாலை ஆசிரியர்கள், அயல்பாடசாலை உயர்தர மாணவர் மன்றத்தின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.