அமரர் மருத்துவ கலாநிதி.யமுனா மார்க்கண்டு நினைவு மண்டபம் திறப்புவிழா

காரைநகர், களபூமி, பாலாவோடையைச் சேர்ந்த திரு.திருமதி. தில்லையம்பலம் மார்க்கண்டு சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகள் அமரர் மருத்துவ கலாநிதி யமுனா மார்க்கண்டு அவர்களின் ஞாபாகார்த்தமாக 'Dr. யமுனா மார்க்கண்டு நினைவு மண்டபம்' வழக்கம்பரை சிவபூமி முதியோர் இல்லத்தில் நிறுவப்பட்டு அன்பளிப்பாக குடும்பத்தினரால் வழங்கப்பட்டுள்ளது.


அமரர்.மருத்துவ கலாநிதி யமுனா மார்க்கண்டு அவர்களின் பாசமிகு பெற்றோரும் அன்புச் சகோதரிகளும் இணைந்து நிறுவிய இந்நினைவு மண்டபத்தின் திறப்புவிழா சென்ற சனிக்கிழமை (17.05.2014) அன்று வழக்கம்பரை சிவபூமி முதியோர் இல்லத்தில் நடைபெற்றது.


வடமாகாண கல்வி அமைச்சின் பிரதிச்செயலாளர் ப.விக்கினேஸ்வரன், காரைநகர் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.ப.ஸ்ரீவிக்கினேஸ்வரன், கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய அதிபர் திருமதி.வாசுகி தவபாலன், ஆசிரியரும், ஊடகவியலாளருமான ந.கணேசமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.


அமரர் மருத்துவ கலாநிதி. யமுனா மார்க்கண்டு அவர்களின் தந்தை திரு.தில்லையம்பலம் மார்க்கண்டு அவர்கள் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் செயலாளர் ஆவார்.


அமரர்.மருத்துவ கலாநிதி.யமுனா மார்க்கண்டு பிரித்தானியாவில் பணியாற்றியபோது நோய்வாய்ப்பட்டு மருத்துவ சிகிச்சையின்போது ஏற்பட்ட சிக்கலினால் துர்ப்பாக்கியமாக உயிரிழக்க நேரிட்டது. இவரின் உயிரிழப்புக்கு பிரித்தானியாவில் அன்னார் சிகிச்சை பெற்ற மருத்துவமனை நிர்வாகம் பொறுப்பேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.