ஈழத்துச் சிதம்பரம் என சிறப்பிக்கப்படும் காரைநகர் சிவன்கோவில் வருடாந்த பெருந்திருவிழா இன்று சனிக்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தொடர்ந்து பதினொரு தினங்கள் சிறப்பாக நடைபெற உள்ள இந்த உற்சவத்தில் எதிர்வரும் 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரதோற்சவமும் 17ம் திகதி திங்கட்கிழமை தீர்த்தோற்சவமும் 18ம் திகதி செவ்வாய்க்கிழமை திருக்கல்யாண உற்சவமும் இடம்பெற உள்ளது.

ஊற்சவத்தையொட்டி தினமும் யாழ் நகரிலிருந்து ஆலயம்வரை நேரடி பஸ் சேவை இடம்பெற்று வருவதுடன் ஆலய சூழலில் உள்ள ஈழத்துச் சிதம்பர அறப்பணிநிலையம்,மாணிக்கவாசகர்மடாலயம் ஆகியவற்றில் அன்னதானமும் வழங்கப்பட்டு வருகின்றது.