சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரின்
ஐந்தாவது பொதுக்கூட்ட அறிவித்தல்
சுவிஸ் வாழ் அன்பான காரைநகர் மக்களே!
உங்களுக்கோர் நற்செய்தி!!
எமது சபையின் நான்காவது பொதுக்கூட்டம் 30.11.2014 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கடந்த மூன்று ஆண்டுகளாக சுவிஸ் வாழ் காரை மாணவர்களை ஊக்குவிப்பதற்கான கலைவிழாக்களும், கிராமத்தின் பல்வேறு அபிவிருத்திப் பணிகளுக்கு உதவிகளும், எமது சபை மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவை உருவாக்கி உலகில் பரந்து வாழும் காரைநகர் மாணக்கருக்கிடையில் தியாகத்திறன் வேள்வி ஊடாக ஆளுமைவிருத்திப் போட்டிகளை நாடத்தியும், தாய்மண்ணில் முப்பெரும்விழா, முத்தமிழ்விழாக்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசிலகள் வழங்கியும், சான்றோர்கள், கலைஞர்கள் கௌரவிப்பும் என்பவையே எமது பிரதான செயல்பாடுகளாக அமைந்து வருகின்றன.
எமது சபையின் யாப்புக்கு அமைவாக பொதுக்கூட்டத்தின் ஊடாக புதிய நிர்வாக சபை உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு தீர்மானித்துள்ளோம்.
இடம்:- Sihlquai 115, 8005 Zürich
காலம்:- 18.02.2018 ஞாயிற்றுக்கிழமை
நேரம்:- 14.00 மணி
நிகழ்ச்சி நிரல்
மங்களவிளக்கேற்றல், தேவாரம், நீத்தார் வணக்கம், மன்றகீதம் இசைத்தல், செயலாளர் அறிக்கை சமர்ப்பித்தல், பொருளாளர் அறிக்கை சமர்ப்பித்தல், புதிய நிர்வாகத் தெரிவு.
சுவிஸ் வாழ் காரை மக்கள் அனைவரையும் வருக வருகவென வரவேற்றுக் கொள்வதோடு உங்கள் ஆரோக்கியமான கருத்துக்களை தெரிவித்து சபையின் வளர்ச்சிக்கு உதவுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
குறிப்பு :- பொதுக்கூட்டம் குறித்த நேரத்திற்கு ஆரம்பமாகும்.
நன்றி
“ஆளுயர்வே ஊருயர்வு”
“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
செயற்குழு உறுப்பினர்கள்
மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
சுவிஸ் வாழ் காரை மக்கள்
01 – 02 – 2018