சுவிஸ் காரைஅபிவிருத்தி சபை நடாத்தும்
தியாகத் திறன் வேள்வி- 2017
திருக்குறள் மனனப்போட்டி பற்றிய அறிவித்தல்
பிரிவு- அ தரம் 02,03
அதிகாரம் 08 அன்புடைமை
பிரிவு- ஆ தரம் 04,05
அதிகாரம் 10 இனியவைகூறல்
அதிகாரம் 30 வாய்மை
இப்போட்டி சம்பந்தமாக தரம் 05 மாணவர்களும் இப் போட்டியில் பங்கு கொள்ளவைப்பதற்காக விண்ணப்ப திகதியை 08.09.2017 வெள்ளிக்கிழமைக் மாற்றியுள்ளோம். அத் திகதிக்கு விண்ணப்பத்தை தருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
முதல் சுற்றுதிருக்குறள் போட்டி 10.09.2017 ஞாயிற்றுக் கிழமை காலை 8.00 மணிக்கு இருபிரிவினருக்கும் நடைபெறும். இடம் பின்னர் அறிவிக்கப்படும்.
திருக்குறள்- நீதிநூல், அறநூல், தலைசிறந்தநூல், பலமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல், உலகப் பொதுநூல். இத்தகைய சிறப்பு வாய்ந்த திருக்குறள் நம் தமிழ் மாணவர்களும் படித்துசுவைத்து மனனம் செய்து குறள் தந்தநெறியில் வாழ, நல்ல சமுதாயத்தை கட்டியெழுப்ப உதவும் வகையில் வகுப்பில் உள்ள எல்லா மாணவர்களையும் மனனம் செய்விக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ஒவ்வொரு வகுப்பிலும் பத்து மாணவர்களுக்கு குறையாது (பிரிவுக்கு 20) மாணவர்களைக் தயார் செய்து விண்ணப்பித்து போட்டியில் பங்குகொள்ள வழி செய்விக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
குறிப்பு:- 75 புள்ளிக்கு மேல் எடுக்கும் மாணவர்கள் அனைவருக்கும் பரிசில் வழங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்பதை அறியத்தருகின்றோம்.
நன்றி
"ஆளுயர்வே ஊருயர்வு"
"நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்"
இங்ஙனம்
திருக்குறள் போட்டித்தொடர்பாளர்
பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
செயற்குழு உறுப்பினர்கள்
மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
சுவிஸ் வாழ் காரை மக்கள
06.08.2017