மரண அறிவித்தல், திரு.குமாரவேலுப்பிள்ளை கனகசபாபதி (கோவளம், காரைநகர்) (உடையார்கட்டு)

                          மரண அறிவித்தல்

20170305_135301

                      திரு.குமாரவேலுப்பிள்ளை கனகசபாபதி

பிறப்பு : 29-06-1945                                                                              இறப்பு : 05-03-2017

காரைநகர் கோவளத்தை (மூக்கம்பிட்டி) பிறப்பிடமாகவும்,உடையார்கட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.குமாரவேலுப்பிள்ளை கனகசபாபதி அவர்கள் ஞாயிற்றுக்கிழமை 05.03.2017 இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற  குமாரவேலுப்பிள்ளை,சிவக்கொழுந்து தம்பதிகளின் இளைய மகனும், வேலுப்பிள்ளை முத்தம்மாவின் அன்பு மருமகனும்,  ஈசுவரியின் அன்புக் கணவரும் ஆவார்.

காலஞ்சென்ற நமசிவாயம், சிவபாக்கியம், தனலட்சுமி மற்றும் குலசிங்கம், சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்ற இராமப்பிள்ளை, மார்க்கண்டு மற்றும் சரஸ்வதி, நாகேஸ்வரி, சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.

சிவராசா (கனடா), சிவநாதன் (உடையார்கட்டு), சிவரூபன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், சர்மிளா(செல்வி), சிவரஞ்சினி(ரஞ்சா), பிரியதர்ஷினி(ராதா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,  ராகவி, பைரவி, சையந்தவி, ரஜீவன், ரதீஸ், பிரனுஷா, பவிஷான்  ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரின் உடையார்கட்டு இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தொடர்புகளுக்கு:

க.சிவராசா (மகன்)   கனடா – 647 894 2166

க.சிவநாதன் (மகன்)  உடையார்கட்டு –  077 941 8347

க.சிவரூபன் (மகன்)  கனடா –  647 831 4136