மரண அறிவித்தல், திரு அருளம்பலம் யோகேந்திரா (ஓய்வுபெற்ற அரச அச்சுப் பதிப்பக அலுவலர்) (வேம்படி,காரைநகர்) (ஸ்காபுரோ, கனடா)


                          மரண அறிவித்தல்

yogenthira

                                    திரு அருளம்பலம் யோகேந்திரா

                              (ஓய்வுபெற்ற அரச அச்சுப் பதிப்பக அலுவலர்)


பிறப்பு: 28.10.1938                                                                     இறப்பு: 25.09.2016
 

காரைநகர் வேம்படியை பிறப்பிடமாகவும் கனடா Scaobrough வை வதிவிடமாகவும் கொண்ட அருளம்பலம் யோகேந்திரா அவர்கள் 25-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

    அன்னார் காலஞ்சென்றவர்களான அருளம்பலம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும் பொன்னம்பலம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

    காலஞ்சென்ற சுபத்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார். 

    யசோதா, சுகிதா, மயூரகுமரன், ஜெயகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ் சென்றவர்களான பாலேந்திரா, தேவகிஅம்மா மற்றும் இராஜேந்திரா, குலேந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

    காண்டீபன், சிவகுமார், சந்திரவித்தியா, தர்ஷிகா ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற பரமநாதர் மற்றும் வசுந்திரதேவி, ரதிவதனி ஆகியோரின் மைத்துனரும்,

    சயானா, சபினா, அஷ்வின், அனுசன், தாரணி, பவித்திரன், கபிலன், பிரஷ்ணவி, பிரஷாண் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். 

    இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

    அன்னாரின் இறுதிக் கிரியைகள் 01-10-2016 சனிக்கிழமை மாலை 4.00மணி முதல் 9.00மணி வரை Chapel Ridge funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON, L3R 5G1  இல் பார்வைக்கு வைக்கப்படும். 

    02-10-2016 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் 9.00மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு தொடர்ந்து கிரியைகள் நடைபெற்று  11.30 மணியளவில்  Elgin Mills Crematorium, 1591 Elgin Mills East, Richmond Hill, ON எனும் முகவரியிலுள்ள மயானத்திற்கு எடுத்துவரப்பட்டு தகனம் செய்யப்படும். 


தொடர்புகளுக்கு

சிவா-  416-208-9343 (கனடா)

கண்ணன்    – 416-844-5392 (கனடா)

மயூரன்-  94718015328 (இலங்கை)

காண்டீபன் –  31243783226 (Holland)