பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கத்திற்கு சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.குலதாசன் பாராட்டு!
பிரித்தானிய காரைநலன் புரிச்சங்கத்திற்கு ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பாராட்டு தெரிவித்துள்ளார். பிரித்தானிய காரை நலன்புரிச்சங்க நிதியுதவியுடன் காரைநகர் முன்பள்ளி மாணவர்களிற்கான இரும்புச்சத்தது பாணி மருந்தினை முன்பள்ளிஆசிரியர்களிடம் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய நலன்புரிச்சங்க நிதியுதவியுடன் காரைநகர் முன்பள்ளி மாணவர்களிற்கான இரும்புச்சத்து பாணி மருந்துகள் ஆசிரியர்களிடம் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் 20.05.2016 வெள்ளிக்கிழமை காரைநகரில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரிஎஸ்.குகதாஸன், காரைநகர் பொது சுகாதார வைத்திய அதிகாரி, முன்பள்ளிஇணைப்பாளர், பிரித்தானிய காரைநலன்புரிச்சங்க காரைநகர் பிரதிநிதி உட்பட முன்பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
சுகாதார வைத்திய அதிகாரி மேலும் உரையாற்றுகையில் எமது அரசின் நிதி ஒதுக்கீட்டில் கர்ப்பிணித்தாய்மாருக்கான சத்துணவு, பாடசாலை மாணவர்களிற்கான சத்துணவுத்திட்டம் என்பனவற்றினை நடைமுறைப்படுத்திய போதிலும் முன்பள்ளிமாணவர்களின் போசாக்கு திட்டத்தில் எவருமே அக்கறை செலுத்துவதில்லை. பொதுவாக இலங்கையில் சிறுவர்களிற்கான இரும்புச்சத்து குறைபாடு பெரும் குறையாக காணப்படுகின்றது. இந் நிலையில் யாழ்ப்பாணம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. காரைநகர் அபிவிருத்தியில் அக்கறை உடைய பிரித்தானிய காரைநலன்புரிச்சங்கம் எனது கோரிக்கையை ஏற்று இதற்கான நிதியுதவியை வழங்கியுள்ளது. பிரித்தானிய நலன்புரிச்சங்கத்
இத்தருணத்தில் காரைநகர் நலன்புரிச்சங்க நிர்வாகத்திற்கு பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம் தனது நன்றியினையும் பாராட்டினையும் தெரிவித்துக் கொள்கிறது.
நன்றி,
நிர்வாகம்
காரை நலன்புரிச்சங்கம் (பிரித்தானியா)