க.பொ.த.(சாதாரணம்) க.பொ.த.(உயர்தரம்) பரீட்சைகளில் சாதனை படைத்து காரை இந்துவிற்கு புகழ்சேர்த்த மாணவர்களிற்கு ஊக்குவிப்பு நிதி வழங்க 40000.00ரூபா பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினால் உதவப்பட்டுள்ளது.

2Nadarasa Rahiniக.பொ.த.(சாதாரணம்) க.பொ.த.(உயர்தரம்) பரீட்சைகளில் சாதனை படைத்து காரை இந்துவிற்கு புகழ்சேர்த்த மாணவர்களிற்கு ஊக்குவிப்பு நிதி வழங்க 40000.00ரூபா பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினால் உதவப்பட்டுள்ளது.

க.பொ.த.(உயர்தரம்)தர பரீட்சையில் காரைநகர் கோட்ட மட்டத்தில் முதன்மைச் சித்தி பெற்ற செல்வி ராகினி நடராசாஇ க.பொ.த.(சாதாரணம்) தர பரீட்சையில் தீவக வலய மட்டத்தில் முதன்மைச் சித்தி பெற்ற செல்வி சாந்தினி கனகலிங்கம் ஆகிய இருவருக்கும் மற்றும் சிறப்புச் சித்தி பெற்று பல்கலைக்கழகம் செல்வதற்கான தகமையினையும் உயர்தரவகுப்பிற்கு செல்வதற்கான தகமையினையும் பெற்ற ஏனைய அனைத்து மாணவர்களுக்கும் பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை தமது பாராட்டுக்களை கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களுக்கு ஊடாகத் தெரிவித்துள்ளது.

இவர்களுடைய சாதனையினால் கல்லூரி அடைந்துள்ள பெருமை குறித்து Shanthini_K-195x255மகிழ்வுற்றிருக்கும் கல்லூரிச் சமூகத்துடன் கனடாக் கிளைச் சங்க உறுப்பினர்களும் இணைந்து கொள்வதாகவும் இந்த மாணவர்களை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் அவர்களிற்கு வழங்கி உதவும் பொருட்டு தமது கிளை, நாற்பதினாயிரம் ரூபாவினை(40000 ரூபா) பழைய மாணவர்களின் தாய்ச் சங்கத்தின் கணக்கிற்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் தலைவர் திரு.சி.தம்பிராஜா அவர்கள் இவ்விணையத்தளத்திற்கு அறியத் தந்துள்ளார்.

மேலும் இம்மாணவர்களின் சாதனைக்கு வித்திட்ட முன்னாள் அதிபர் திரு.பொன்.சிவானந்தராசா, தற்போதயை அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் ஆகியோரின் சிறந்த வழிநடத்தலையும் மற்றும் இம்மாணவர்களுக்குக் கல்வி புகட்டிய அனைத்து ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான சேவையையும் இச்சந்தர்ப்பத்தில் பாராட்டுவதுடன் அவர்களுக்கு கனடாக் கிளைச் சங்கத்தின் சார்பில் தமது நன்றியினையும் அவர் தெரிவித்துள்ளார்.