மரண அறிவித்தல்
திரு.பேரம்பலம் சிவலிங்கம்
களபூமி தெருவடிப் பிள்ளையார் கோவிலடி, காரைநகர்
(வைரப்புளியங்குளம்,வவுனியா)
தோற்றம் :15 மார்ச் 1934 மறைவு : 04 மார்ச் 2016
காரைநகர் பாலாவோடையை பிறப்பிடமாகவும், களபூமி தெருவடிப் பிள்ளையார் கோவிலடியை வதிவிடமாகவும், வவுனியா வைரவப்புளியங்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திரு.பேரம்பலம் சிவலிங்கம் அவர்கள் 04.03.2016 வெள்ளிக்கிழமை அன்று அகால மரணமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பேரம்பலம் சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவயோகத்தின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, பரமேஸ்வரி, நாகம்மா, சிவசும்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிவனேஸ்வரி(சிவம்) (ஆசிரியயை, வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம்), சூரியகுமார், ஜெயக்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரவிசங்கர்(கனடா), நாகரூபி, தயாநிதி(ஆசிரியை , காரைநகர் இந்துக் கல்லூரி) ஆகியோரின் மாமனாரும்,
ஹரினிகா, குகராஜ், நிருஷிகா, அனுசாந்தன், அபிசாந்தன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியை 06.03.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக தட்சணாங்குளம் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
சங்கர் (மருமகன்,கனடா) +1 438 994 7172
குகதாசன் (பெறாமகன்,கனடா) +1 647 926 3785
சிவம் (மகள்,இலங்கை) +94242222145
சூரியகுமார் (மகன்,இலங்கை) +94767062329
ஜெயகுமார் (மகன்,இலங்கை) +9477328 9135