மரண அறிவித்தல்
திரு. செல்லையா இராமுப்பிள்ளை
(இளைப்பாறிய ஆசிரியர்- வியாவில் சைவ வித்தியாலயம்)
காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும், தற்போது ஆலடியை வதிவிடமாகவும் கொண்ட திரு. செல்லையா இராமுப்பிள்ளை அவர்கள் 23-02-2016 செவ்வாய்க்கிழமை அன்று மாலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா நாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
கோமளவல்லி(இளைப்பாறிய ஆசிரியை- யாழ்ற்றன் கனிஷ்ட வித்தியாலயம் வேம்படி) அவர்களின் அன்புக் கணவரும்,
சிறீமுருகானந்தன், சிவானந்தன், சிவாலிங்கம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கனகசபை, சோமசுந்தரம் அன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நகுலேஸ்வரி, சாந்தி, நளினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிறீலஷ்மி, கஜன், விதுர்ஷன், வைசாளினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் ஆலடியில் அன்னாரது இல்லத்தில் 25.02.2016 வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு நடைபெற்று பூதவுடல் நல்லடக்கத்திற்காக நீலங்காட்டு இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:-
சிவானந்தன் — மகன் ( இலங்கை)
(பெரியப்பா )
தொ. இல :- 0777313924