மரண அறிவித்தல்
திரு.சங்கரப்பிள்ளை சோமசேகரம்பிள்ளை (சித்தப்பா)
திருநகர், கிளிநொச்சி – மாப்பாணவூரி, காரைநகர்
தோற்றம்: 20-12-1936 மறைவு: 06-02-2016
காரைநகர் மாப்பாணவூரியை பிறப்பிடமாகவும் இலக்கம் 231, திருநகர், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்டவரும் காரைநகர் நீலிப்பந்தனை துர்க்கை அம்மன் ஆலய தர்மகர்த்தாவுமாகிய சித்தப்பா என அழைக்கப்படும் சங்கரப்பிள்ளை சோமசேகரம்பிள்ளை அவர்கள் 06-02-2016 சனிக்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை – பார்வதி தம்பதியினரின் அன்புப் புதல்வனும்
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் – பொன்னம்மா தம்பதியினரின் மருமகனும்
ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகரான செல்வராணியின் பாசமிகு கணவரும்
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, சின்னாச்சிப்பிள்ளை (பாப்பா ரீச்சர் -ஆசிரியை), வேலுப்பிள்ளை (முன்னாள் விரிவுரையாளர், பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலை), நேசரத்தினம், இராமச்சந்திரன் (முன்னாள் பரிசோதகர், நீர்ப்பாசனத் திணைக்களம்) குணநாயகம் (முன்னாள் முகாமையாளர், காரைநகர் ப.நோ.கூ.சங்கம்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்
காலஞ்சென்ற பார்வதி, சரஸ்வதி, இராசம்மா மற்றும் புவனேஸ்வரி, செல்வநாயகி (முன்னாள் பணியாளர், கரைச்சி தெற்கு ப.நோ.கூ.சங்கம்) ஆகியோரின் அருமை மைத்துனரும்
பிரகலாதன், பிறேம்குமார் (குமரன் – மாவட்டச் செயலகம் கிளிநொச்சி), துஸ்யந்தன் (பொறியியலாளர்), அம்பிகை (மாவட்ட வைத்தியசாலை கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்
பூங்கோதை, இராஜரஞ்சினி (ஆசிரியைஇ கிளிநொச்சி இந்துக் கல்லூரி), சுதர்சினி, சுகந்தன் (பிரதேச செயலகம, சங்கானை) ஆகியோரின் மாமனாரும்
வைஸ்ணவி, அபிசேக், அஸ்வின், சஜிஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியை 07-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்னாரின் இல்லமான இல.231 திருநகரில் நடைபெற்று மதியம் 12 மணியளவில் தகனக் கிரியைக்காக திருநகர் பொது மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு: 094212285985